For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அண்ணா அறிவாலயத்தில் மாநகராட்சி இடம் ஆக்கிரமிப்பா?

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கம் என்றதிருமண மண்டபம் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டுளளது.

சென்னையின் மையப் பகுதியான அண்ணா சாலையில் சைதாப்பேட்டை அருகே உள்ளது அண்ணா அறிவாலயம்.இது தான் திமுகவின் தலைமை அலுவலகமாகும். இதன் மாடியில் தான் சன் டிவி அலுவலகம் உள்ளது.

இந்தக் கட்டடத்துக்குப் பின் புறம் அதே வளாகத்தில் கலைஞர் அரங்கம் உள்ளது. திமுகவின் நிகழ்ச்சிகள்,கட்சிக்காரர்களின் திருமண நிகழ்ச்சிகள் இங்கு நடத்தப்படுவது வழக்கம்.

கிட்டத்தட்ட 8.5 கிரவுண்ட் விஸ்தாரம் உள்ள இந்த இடம் மாநகராட்சிக்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறது.இதன் மதிப்பு ரூ. 9 கோடியை தாண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த இடத்தை திமுக ஆக்கிரமித்துகல்யாண மண்டபத்தைக் கட்டியுள்ளதாகத் தெரிகிறது.

இந்த இடத்தை சென்னை மாநகராட்சி மீட்கும் என துணை மேயர் கராத்தே தியாகராஜன் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

அண்ணா அறிவாலயத்தின் பின்புறம் உள்ள இடம் மாநகராட்சிக்குச் சொந்தமானது.

அதை ஆக்கிரமித்து கல்யாண மண்டபம் கட்டியுள்ளதாக மாநகராட்சி நகரமைப்புத் தலைவர் வெற்றிவேல் புகார்கொடுத்துள்ளார். இது மிகப் பெரிய குற்றச்சாட்டு.

முதலில் அந்த இடத்தை மாநகராட்சியிடம் ஒப்படைப்பதாக திமுக அறக்கட்டளை முடிவு செய்தது. ஆனால்பின்னர் அந்த இடத்தில் கல்யாண மண்டபம் கட்டி விட்டனர்.

அறக்கட்டளையின் பெயரில் அறிவாலயம் உள்ளிட்ட இடங்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் கலைஞர்அரங்கத்தில் திருமணம் நடத்த காசு வாங்குகிறார்கள். கல்யாணத்திற்கு எவ்வளவு வாடகை வாங்குகிறார்கள்,எத்தனை கல்யாணங்கள் அங்கு நடந்துள்ளது, முறையாக வரி கட்டியுள்ளார்களா என்பதை ஆராயவுள்ளோம்.

அதன் பிறகு மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை கைப்பற்றுவோம் என்றார் கராத்தே தியாகராஜன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X