For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கஞ்சி தொட்டி கலாட்டா .. கருணாநிதி, ராமதாஸ் கடும் கண்டனம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மதுரை கஞ்சித் தொட்டி திறப்பு நிகழ்ச்சியில் போலீஸார் சர்வாதிகாரப் போக்குடன் நடந்து கொண்டுள்ளதைமன்னிக்க முடியாது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

மதுரையில் நேற்று ஸ்டாலின் கலந்து கொள்வதாக இருந்த கஞ்சித் தொட்டி திறப்பு நிகழ்ச்சியில் பெரும் வன்முறைமூண்டது. போலீஸாரும அதிமுகவினரும் திமுகவினரைத் தாக்கினர்.

முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன் மண்டை உடைந்தது, கண்ணிலும் அடி விழுந்துள்ளது. முன்னாள் சபாநாயகர்பி.டி.ஆர். பழனிவேல்ராஜன், மேயர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்தச் சம்பவத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ளஅறிக்கையில்,

கைத்தறி நெசவாளர்களுக்கு கஞ்சி வழங்கும் நிகழ்ச்சிக்கு முதலில் திமுகவுக்கு அனுமதி கொடுத்து விட்டு,மேலிடத்தின் உத்தரவின் பேரில் திமுகவினரை நையப்புடைத்து விரட்டியுள்ளனர்.

அதே சமயம், அதற்கு அருகிலேயே அதிமுகவினரின் பிரியாணி விருந்துக்கு வழி வகுத்துக் கொடுத்ததோடு,அவர்களுக்கு அடியாட்கள் போல செயல்பட்டிருக்கிறார்கள்.

ஒரு ஜனநாயக நாட்டில் இதுபோன்ற சர்வாதிகார வெறியாட்டத்தை சகித்துக் கொள்ள முடியாது. இந்த அராஜகப்போக்கு குறித்து விவாதித்து முடிவெடுக்க விரைவில் கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டப்படும் என்று கூறியுள்ளார்கருணாநிதி.

ராமதாஸ்:

மதுரை கலவரம் குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவதற்கு காவல்துறையே காரணமாக இருப்பது கவலை தருகிறது. தமிழகத்தின் அராஜக ஆட்சியை ஒழிப்பதற்கு அனைத்துக்கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X