For Daily Alerts
Just In
தூத்துக்குடியில் பயங்கர தீ விபத்து: 2 சிறுவர்கள் பலி
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் ஏற்பட்ட பயங்கரமான தீ விபத்தில் 2 சிறுவர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
தூத்துக்குடியை அடுத்துள்ள சத்யா நகர் பகுதியில் ஏராளமான குடிசைகள் அமைந்துள்ளன.
இந்தக் குடிசைப் பகுதியில் உள்ள ஒரு குடிசையில் நேற்று மாலை திடீரென்று தீ பிடித்துக் கொண்டது.
அந்த நேரத்தில் அங்கே பலத்த காற்றும் வீசியதால் மளமளவென்று தீ பரவியது. இதனால் சுமார் 40 குடிசைகள்எரிந்து சாம்பலாயின.
இந்தத் தீ விபத்தில் 2 சிறுவர்கள் தீயில் சிக்கிக் கொண்டு உடல் கருகிப் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்தபலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
தீ விபத்து சம்பவம் அறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயைஅணைத்தனர். இவ்விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Comments
Story first published: Wednesday, May 1, 2002, 5:30 [IST]