டெல்லியில் தமிழக போலீஸ் கண்ணாமூச்சி
டெல்லி:
டெல்லி கொண்டு போகப்பட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை வரவேற்க விமான நிலையம் சென்றமத்திய அமைச்சர்கள் செஞ்சி ராமச்சந்திரன், கண்ணப்பன் ஆகியோரை ஏமாற்றி விட்டு வேறு வழியாகவைகோவை தமிழக போலீஸார் கொண்டு சென்றனர்.
துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பதற்காக பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவைகோ, பலத்த பாதுகாப்புடன் டெல்லி கொண்டு போகப்பட்டார்.
அவரை விமான நிலையத்தில் வரவேற்பதற்காக செஞ்சி ராமச்சந்திரன் மற்றும் கண்ணப்பன் மற்றும் சில மதிமுகநிர்வாகிகள் விமான நிலையத்திற்கு சென்று காத்திருந்தனர்.
ஆனால், முக்கிய வாசல் வழியாக வராமல் வேறு வழியாக வைகோவை தமிழக போலீஸார் அழைத்துச் சென்றுவிட்டனர். இதனால் ஏமாற்றமடைந்த மத்திய அமைச்சர்கள் திரும்பிச் சென்றனர். நாடாளுமன்றத்தில் சென்றுவைகோவைச் சந்தித்தனர்.
ஆனால் மதிமுக நிர்வாகிகள் இதை கண்டித்து விமான நிலையம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.