For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தோடு வாங்கித் தராத கணவன்... ஆத்திரத்தில் பெண் தற்கொலை

By Staff
Google Oneindia Tamil News

திருநெல்வேலி:

தங்கத் தோடு வாங்கித் தர தன் கணவன் மறுத்ததால் கோபமடைந்த ஒரு பெண் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டார். அவர் வைத்த தீ பக்கத்து குடிசைகளுக்கும் பரவியதில் 10 வீடுகள் எரிந்து சாம்பலாயின.

திருநெல்வேலியில் உள்ள சிந்துபூந்துறை பகுதியைச் சேர்ந்தவர் அருணாச்சல வடிவு. இவரது கணவர் அருணாச்சலவடிவுக்கு தங்கத் தோடு வாங்கித் தருவதாக கூறியிருந்தார். ஆனால் ரொம்ப நாட்களாகவே வாங்கித் தராமல்இருந்தார்.

இதுதொடர்பாக இருவருக்கும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் இருவருக்கும் இடையே வாக்குவாதம்ஏற்பட்டது.

பின்னர் அது சண்டையாகவே அருணாச்சல வடிவு கோபமடைந்தார். கணவன் வீட்டை விட்டு சென்ற பின் உடலில்தீயை வைத்துக் கொண்டார்.

பக்கத்து வீடுகளுக்கும் தீ பரவியதில் பத்துக்கும் மேற்பட்ட குடிசைகள் கருகின. வடிவும் தீயில் கருகி இறந்தார்.

இதுகுறித்து திருநெல்வேலி ஜங்ஷன் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X