தீவிரவாதிகள் அச்சுறுத்தல்: ரயில் நிலையங்களில் தீவிர பாதுகாப்பு
சென்னை:
வரும் சுதந்திர தினத்தன்று பல இடங்களையும் குண்டு வைத்து தகர்ப்போம் என்று சில தீவிரவாத இயக்கங்கள்மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் பாதுகாப்புதீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களில் மட்டும் சுமார் 1,000 போலீசார்குவிக்கப்படவுள்ளனர்.
மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல ரயில்நிலையங்களிலும் 24 மணி நேர தீவிர கண்காணிப்புப் பணி ஏற்கனவே ஆரம்பித்து விட்டது.
ரயில் நிலையத்திற்கு வரும் ஒவ்வொருவரும் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்படுகின்றனர். அவர்கள்கொண்டு வரும் பைகள், சூட்கேஸ்கள் மற்றும் பெட்டிகள் என்று அனைத்தையும் திறந்து போலீசார் சோதனையிட்டுவருகின்றனர்.
அனைத்து ரயில் நிலையங்களிலும் ஒரே ஒரு நுழைவு வாயிலும் ஒரே ஒரு வெளியே செல்லும் வாயிலும் மட்டுமேஇருக்கும்.
புரளி மற்றும் மிரட்டல் தொலைபேசி அழைப்புகளைக் கண்காணிப்பதற்காக அனைத்து ரயில் நிலையங்களிலும்உள்ள தொலைபேசிகளில் "காலர் ஐடென்டிட்டி" மெஷின் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் உள்ள முக்கியமான ரயில்வே மேம்பாலங்களிலும் சந்தேகத்திற்கு இடமாக யாராவதுநடமாடுகிறார்களா என்று போலீசார் ரகசியமாகக் கண்காணித்து வருகின்றனர்.