"பெரிசு"களும் ஈவ் டீசிங் செய்கிறார்கள்: சென்னை போலீஸ் கமிஷனர்
சென்னை:
வயது முதிர்ந்த பெரியவர்கள் கூட ஈவ் டீசிங்கில் ஈடுபடுகிறார்கள் என்று சென்னை மாநகரப் போலீஸ் கமிஷனர்விஜயகுமார் கூறினார்.
சென்னையில் இன்று சுதந்திர தின விழாவுக்கான ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. அதன் பின்னர் நிருபர்களிடம்விஜயகுமார் கூறியதாவது:
ஈவ் டீசிங் பிரச்சனை அங்கொன்றும் இங்கொன்றுமாக இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
இது தொடர்பாக சுமார் 500 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் இதுவரை சுமார் ரூ.70,000 வரை ஈவ்டீசிங் செய்தவர்களிடமிருந்து அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளது.
பள்ளி-கல்லூரி மாணவர்கள், ரவுடிகள் என்றில்லாமல் தற்போது பல வயதான பெரியவர்கள் கூட ஈவ் டீசிங்செய்து வகையாக மாட்டிக் கொண்டுள்ளனர்.
வயதானவர்கள் என்பதால் அவர்களை விட்டுவிட முடியுமா? அவர்களுக்கும் தண்டனை அளித்துக் கொண்டு தான்இருக்கிறோம்.
சுதந்திர தினத்தையொட்டி சென்னை மாநகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நாளை மறுநாள்கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் என்றார் விஜயகுமார்.