ரஜினி ரசிகர்கள் கொதிப்பு
சென்னை:
ரஜினிகாந்த்தை ஒருமையில் அழைத்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விமர்சனம் செய்திருப்பது ரஜினிரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சந்தனக் கடத்தல் வீரப்பனை சம்ஹாரம் செய்ய வேண்டும் என்று சமீபத்தில் ரஜினி பெங்களூரில் பேசியிருந்தார்.
இந்நிலையில் நேற்று மயிலாடுதுறையில் நடந்த வன்னியர் சங்க மகளிர் மாநாட்டில் பேசிய ராமதாஸ், ரஜினியைக்கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.
"பாபா" படத்தின் மூலம் ரசிகர்களுக்கு சிகரெட் பிடிக்கவும் தண்ணியடிக்கவும் தான் ரஜினி கற்றுக் கொடுத்துள்ளார்என்று கூறிய ராமதாஸ், வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த வீரப்பனைக் கொல்ல வேண்டும் என்று கூறிய ரஜினியின்"பாபா" படத்தை வன்னியர்கள் யாரும் பார்க்கக் கூடாது என்றும் ராமதாஸ் பேசினார்.
ராமதாசின் இந்தப் பேச்சு ரஜினி ரசிகர்ளை மிகவும் கொந்தளிக்கச் செய்துள்ளது.
மேலும் ராமதாஸ் பேசும் போது ரஜினியை ஒருமையில் பேசியதாகவும் தெரிகிறது. இது ரஜினி ரசிகர்களின்கோபத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.