ராமதாஸை புறக்கணிக்க நிருபர்கள் முடிவு
சென்னை:
பத்திரிக்கையாளர்களை அவன், இவன் என்று ஏக வசனத்தில் பேசியும், பத்திரிக்கைகளை வெளிவர விடாமல்செய்து விடுவேன் என்று மிரட்டும் தொணியிலும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ்பேசியிருப்பது நிருபர்களிடையே பெரும் எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது.
மயிலாடுதுறையில் நடந்த வன்னியர் சங்க மகளிர் மாநாட்டில் கலந்து கொண்டு ராமதாஸ் பேசுகையில், நடிகர்ரஜினி காந்த் குறித்தும், பத்திரிக்கையாளர்கள் குறித்தும் கடுமையாக விமர்சித்தார்.
நான் நினைத்தால் ஒரு பத்திரிக்கை கூட வராது என்று நாளிதழ்களையும் ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.இது பத்திரிக்கை நிருபர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ராமதாஸின் பேச்சு குறித்து சென்னை பத்திரிக்கையாளர் சங்கம், சென்னை நிருபர் சங்கம் ஆகியவற்றின்நிர்வாகிகள் கூடி விவாதித்துள்ளனர்.
பத்திரிக்கையாளர்கள் குறித்துக் கூறிய கருத்துக்களை ராமதாஸ் வாபஸ் பெற வேண்டும் மற்றும் இழிவாகப்பேசியதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அவரது பேட்டிகள் மற்றும் கூட்டங்களில்கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பது என்று அக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.