For Quick Alerts
For Daily Alerts
Just In
நான் சேர மாட்டேன்: ப.சி.
சென்னை:
காங்கிரஸ் கட்சியுடன், தமிழ் மாநில காங்கிரஸ் இணைவது என்ற முடிவு விவேகமான ஒன்று என்று காங்கிரஸ்ஜனநாயகப் பேரவை கட்சியின் பொதுச் செயலாளர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.
தமாகாவைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரான ப. சிதம்பரம் இப்போது தமாகாவில் இல்லை. தமாகாவில் இருந்தபோது மத்திய நிதி அமைச்சராகவும் இருந்துள்ளார் அவர்.
இந்த நிலையில் தமாகாவும், காங்கிரஸும் மீண்டும் இணைவதை சிதம்பரம் வரவேற்றுள்ளார். இதுதொடர்பாகஅவர் விடுத்துள்ள அறிக்கையில்,
இது ஒரு விவேகமான முடிவு. ஆனாலும் காங்கிரஸ் தலைமையில் மூன்றாவது அணி அமைந்தால் தான் காமராஜர்ஆட்சி குறித்து நாம் நினைத்துப் பார்க்க முடியும்.
காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்படும். இருப்பினும்காங்கிரஸுடன் இணைய மாட்டேன் என்று அவ்வறிக்கையில் சிதம்பரம் கூறியுள்ளார்.
Comments
Story first published: Friday, May 24, 2002, 5:30 [IST]