For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரெட்டை வேடம் போடும் ரஜினி: திருமாவளவன் குற்றச்சாட்டு

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி:

பாமக தலைவர் டாக்டர் ராமதாஸைத் தொடர்ந்து, விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளர்திருமாவளவனும், நடிகர் ரஜினிகாந்த் குறித்து கடுமையான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறையில் நடந்த வன்னியர் சங்கக் கூட்டத்தில் பேசிய ராமதாஸ், ரஜினி குறித்து கடுமையானகருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.

ஒருமையில் ரஜினி குறித்துப் பேசிய ராமதாஸ் தமிழக இளைஞர்களை ரஜினி கெடுத்து விட்டார். அவரையெல்லாம்வளர்த்து விடாதீர்கள் என்றும் கடுமையாக சாடினார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ராமதாஸின் பரம வைரியான விடுதலைச் சிறுத்தைகள்கட்சியின் பொதுச் செயலாளர் திருமாவளவனும் ரஜினியைக் கடுமையாக சாடியுள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

கடந்த 15 வருடமாகவே ரஜினி அரசியலுக்கு வரப் போகிறார், வரப் போகிறார் என்று கூறிக் கொண்டு பூச்சாண்டிகாட்டிக் கொண்டிருக்கிறார்கள். அரசியலுக்கு வர விரும்பினால் அவர் வரட்டுமே, யார் தடுக்கிறார்கள்? அதைவிடுத்து எதற்காக சும்மா சும்மா கூறிக் கொண்டேயிருக்க வேண்டும்.

தமிழக இளைஞர்களைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார் ரஜினி. கடந்த 30 ஆண்டுகளாக இவரும், தமிழ் சினிமாவும்தமிழக இளைஞர்களைக் கெட்ட வழியில் கொண்டு சென்று கொண்டுள்ளனர். இவர்கள் விஷயத்தில் தமிழகஇளைஞர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

"பாபா" படம் இன்னும் வெளியாகவேயில்லை. அதற்குள் ரூ.50 கோடிக்கு , ரூ.60 கோடிக்கு விற்கப்பட்டு விட்டதுஎன்கிறார்கள். அப்படி என்ன அந்தப் படம் பெரிய உலக அதிசயமா? அதுவும் ஒரு சாதாரண சினிமா தானே?

ரஜினியை விடச் சிறந்த நடிகர்கள் உலகில் பல பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு கூட இத்தனை பெரியவிளம்பரம், படோடாபம் கொடுக்கப்பட்டதில்லை. ஆனால் இந்த "பாபா" படம் குறித்து என்னென்னவோவிளம்பரம் செய்கிறார்கள். இது மிகவும் வருந்தத்தக்கது.

வீரப்பன் விவகாரத்தில் ரஜினி இரட்டை வேடம் போடுகிறார். தமிழகத்தில் வீரப்பன் குறித்து அவர் வாயேதிறப்பதில்லை. ஆனால் அவரது சொந்த மாநிலமான கர்நாடகத்திற்குச் சென்று விட்டால், வீரப்பன் ராட்சசன்என்கிறார். அவனை அழிக்க வேண்டும் என்கிறார். ஆவேசமாகப் பேசுகிறார்.

இங்கு ஒரு நிலை, அங்கு ஒரு நிலை என அவர் போடும் இரட்டை வேடத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

வீரப்பன் குறித்து ரஜினி கூறிய கருத்துக்களுக்கு பாமக தலைவர் ராமதாஸ் கொடுத்துள்ள பதில் சரியானது தான்.ஆனால் வீரப்பன் தனது ஜாதிக்காரன் என்பதற்காக ராமதாஸ் ரஜினியை சாடியுள்ளார். இது மோசமானது,கண்டிக்கத்தக்கது என்றார் திருமாவளவன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X