""கஞ்சியோ முட்டை பிரியாணியோ பிரச்சனைகளைத் தீர்க்காது"": சு. சுவாமி
சென்னை:
ஏழை நெசவாளர்களுக்கு கஞ்சி வழங்குவதாலோ அல்லது முட்டை பிரியாணி கொடுப்பதாலோ அவர்களுடையபிரச்சனை தீர்ந்து விடப் போவதில்லை என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கூறினார்.
சென்னையில் இன்று அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
அதிமுகவும் திமுகவும் தற்காலிகமாகத் தான் நெசவாளர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க முயற்சித்துக்கொண்டிருக்கின்றன.
அதனால் தான் அதிமுகவினர் முட்டை பிரியாணி வழங்குவதிலும் திமுகவினர் கஞ்சித் தொட்டி வைப்பதிலும்ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இவற்றையெல்லாம் விட்டு விட்டு கைத்தறி நெசவாளர்களின் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண முயற்சிக்கவேண்டும். கைத்தறிகளை நவீன மயமாக்கி அவற்றின் மூலம் நெய்யப்படும் துணிகளை ஏற்றுமதி செய்வதற்குத்தமிழக அரசு வழி வகை செய்ய வேண்டும்.
தமிழகத்தைப் பொருளாதார ரீதியில் மேம்படுத்துவதற்கு 15 நல்ல திட்டங்களை வைத்திருப்பதாக தமிழக முதல்வர்ஜெயலலிதா கூறினார். ஆனால் அந்தத் திட்டங்கள் எல்லாம் என்ன என்பதை அவர் தெளிவாக முதலில் விளக்கவேண்டும்.
ரஜினி காந்த்தின் "பாபா" படத்தைப் பார்க்கக் கூடாது என்று பாமக தலைவர் வன்னியர் சமுதாயத்திற்குஉத்தரவிட்டுள்ளார். இது மிகவும் தவறானதாகும்.
சென்சார் போர்டு சான்றிதழுடன் வெளிவந்து ஓடிக் கொண்டிருக்கும் அந்தப் படத்தைப் பார்க்க மக்களுக்கு உரிமைஉண்டு. அந்த உரிமையைத் தடுப்பது ஐ.பி.சி. சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் குஜராத் செல்வதை யாரும் தடுக்கக் கூடாது. அவர் இந்தியாவின் எந்தப்பகுதிக்கும் எப்போதும் செல்வதற்கு உரிமை உண்டு என்றார் சுவாமி.