ஜெ.க்கு எதிரான டான்சி வழக்கு: 20ம் தேதி இறுதிக் கட்ட விசாரணை
டெல்லி:
டான்சி வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்தொடரப்பட்ட வழக்கின் இறுதிக் கட்ட விசாரணை வரும் 20ம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.
டான்சி வழக்கு தொடர்பாக ஜெயலலிதா உள்ளிட்ட அனைவரையுமே விடுதலை செய்து கடந்த ஆண்டு டிசம்பர்4ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தினகர் உத்தரவிட்டார்.
உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து திமுக வழக்கறிஞரான ஆலந்தூர் ஆர்.எஸ். பாரதி மற்றும் ஜனதாக்கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் தனித் தனியே மனுத் தாக்கல்செய்திருந்தனர்.
இம்மனுக்களை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம் வரும் 20ம் தேதி இது தொடர்பாக இறுதிக் கட்ட விசாரணையைமேற்கொள்கிறது.
விசாரணை முடிந்ததும் தீர்ப்பும் உடனடியாக வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
டான்சி வழக்கிலிருந்து விடுதலையான பிறகு தான் ஜெயலலிதாவால் தேர்தலில் போட்டியிட முடிந்தது என்பதும்அதன் பின்னரே அவர் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு தமிழக முதல்வரானார் என்பதும்குறிப்பிடத்தக்கவை.