நடமாடும் அரசு மருத்துவமனைகள்: தமிழகத்தில் அறிமுகம்
சென்னை:
கிராமப்புற மக்களுக்கு மருத்துவ வசதி கிடைக்கும் வகையில் நடமாடும் மருத்துவமனைகளை தமிழக அரசு இனறுஅறிமுகப்படுத்தியது.
இந்தத் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று துவக்கி வைத்தார்.
இத் திட்டத்திற்காக ரூ. 1 கோடி செலவில் 25 வாகனங்கள் அரசு வாங்கியுள்ளது. தர்மபுரி, சேலம், விழுப்புரம்,ஈரோடு, திருச்சி, பெரம்பலூர், மதுரை, தேனி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் முதல் கட்டமாக இத் திட்டம்அறிமுகப்படுத்தப்படுகிறது.
பின்னர் படிப்படியாக பிற மாவட்டங்களுக்கும் இது விரிவாக்கப்படும்.
ஒவ்வொரு வாகனத்திலும் ஒரு டாக்டர் தலைமையிலான 6 பேர் கொண்ட மருத்துவக் குழு இடம் பெற்றிருக்கும்.வாரத்தின் அனைத்து நாட்களும் இந்த நடமாடும் மருத்துவமனை செயல்படும்.
தினமும் குறிப்பிட்ட 5 பகுதிகளுக்கு இந்த நடமாடும் மருத்துவமனை வந்து செல்லும். ஒவ்வொரு வாகனத்திலும்ரூ. 2 லட்சம் மதிப்புள்ள மருந்துகள், கருவிகள் வைக்கப்பட்டிருக்கும்.
இதற்கான நிகழ்ச்சி கோட்டையில் நடந்தது. இந்த மருத்துவ வாகனங்களின் சாவிகளை மருத்துவத்துறைஊழியர்களிடம் முதல்வர் ஜெயலலிதா இன்று வழங்கினார். விழாவில் ஜெயலலிதா பச்சை சேலை அணிந்திருக்கமருத்துவத் துறையின் பெண் ஊழியர்களும் பச்சை சேலைகளில் வந்திருந்தனர்.
மேடையில் சேர்களில் ஆரம்பித்து எல்லாம் பச்சை நிறமே... பச்சை நிறமே..
பொதுப் பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நலத்துறை அமைச்சர் செம்மலை உள்ளிட்டவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.