For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயாவின் டான்சி ஊழல்: உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

டான்சி வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்தொடரப்பட்ட வழக்கின் இறுதிக் கட்ட விசாரணை இன்று நடக்கிறது. இந்த விசாரணை நேற்று நடப்பதாகஇருந்தது.

ஆனால், நேரமின்மை காரணமாக அது ஒத்தி வைக்கப்பட்டு இன்று பிற்பகலில் விசாரணை துவங்குகிறது.

தமிழகத்தில் முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் டான்சி வழக்கில் ஜெயலலிதாவுக்கு மூன்று ஆண்டு சிறைத்தண்டனை அளித்து தனி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சசிகலா உள்ளிட்ட மற்றவர்களுக்கும் சிறைத் தண்டனைவழங்கப்பட்டது.

இதனால் கடந்த ஆண்டு மே 10ம் தேதி நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதாவால் போட்டிபோட முடியவில்லை.

இதையடுத்து ஜெயலலிதா உள்ளிட்ட அனைவரும் தனி நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

அவர்களுடைய மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி தினகர் கடந்த ஆண்டு டிசம்பர் 4ம் தேதி டான்சிவழக்கில் சம்பந்தப்பட்ட ஜெயலலிதா உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

இதையடுத்து கடந்த பிப்ரவரி இறுதியில் நடைபெற்ற ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றஜெயலலிதா, மார்ச் 2ம் தேதி மீண்டும் தமிழக முதல்வரானார்.

இதற்கிடையே டான்சி வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து திமுக வழக்கறிஞரானஆலந்தூர் பாரதி மற்றும் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதி ராஜேந்திர பாபு மற்றும் நீதிபதி வெங்கடராம ரெட்டி ஆகியோர் அடங்கியபெஞ்ச் விசாரித்து வருகிறது.

இறுதி கட்ட விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X