For Daily Alerts
Just In
ரெய்ட் நடக்கவில்லை
சென்னை:
தமிழர் தேசிய இயக்க அலுவலகங்கள் இன்று பூட்டி சீல் வைக்கப்பட்ட போதிலும் அங்கு சோதனை எதுவும்நடத்தவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
மேலும் அங்கிருந்து எந்த ஆவணங்களையும் கைப்பற்றி எடுத்துச் செல்லவில்லை என்றும் போலீசார் கூறினர்.
தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறனின் வழக்கறிஞரான சந்திரசேகரும் இந்தத் தகவலை உறுதிசெய்தார்.
மயிலாப்பூரில் சீலிடப்பட்ட அந்தக் கட்டடத்தில் ஒரே ஒரு அறை மட்டும் தான் கட்சி அலுவலகமாகச் செயல்பட்டுவந்தது என்று நாங்கள் கூறிய போதிலும் போலீசார் அந்தக் கட்டடம் முழுவதையும் பூட்டி சீல் வைத்து விட்டனர்என்றும் சந்திரசேகரும் தெரிவித்தார்.
Comments
Story first published: Thursday, May 24, 2001, 5:30 [IST]