For Daily Alerts
Just In
ரவுடி வெட்டிக் கொலை
சென்னை:
கட்டப் பஞ்சாயத்து செய்யச் சென்ற ரவுடி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டான்.
சென்னை சிந்தாதிரிப் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுசமீபத்தில்தான் விடுதலையாகி வெளியே வந்தான். பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவன் இவன்.
வெளியே வந்தவுடன் மறுபடியும் தனது கட்டப் பஞ்சாயத்து வேலைகளைத் தொடங்கினான்.
திருவல்லிக்கேணி பல்லவன் நகர் பகுதியில் 2 பேருக்கு இடையே ஏற்பட்ட தகராறிைல் தலையிட்டு பணம்பறிப்பதற்காக தனது ஆட்களுடன் அங்கு சென்றான்.
அப்போது ஏற்பட்ட மோதலில் வெங்கடேசன் படுகொலை செய்யப்பட்டான். அவருடன் இருந்தஇன்னொருவனுக்கும் படுகாயம் ஏற்பட்டது.
Story first published: Wednesday, May 1, 2002, 5:30 [IST]