For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கடத்தலுக்கு புலி ஆதரவாளர்கள் தான் காரணம்: சு.சுவாமி

Google Oneindia Tamil News

சென்னை:

முன்னாள் அமைச்சர் நாகப்பா கடத்தப்பட்ட விவகாரத்தில் கர்நாடக உள்துறை அமைச்சர் (காவல்துறை அமைச்சர்) மல்லிகார்ஜூன கார்கேராஜினாமா செய்ய வேண்டும் என ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கூறினார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அதிரடிப்படை விரட்டி வருவதால் வீரப்பன் கர்நாடக காட்டுப் பகுதியில் புகுந்துமிக ஜாலியாக சுற்றித் திரிகிறான். கர்நாடக காங்கிரஸ் கட்சியில் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களின் ஆதரவும் வீரப்பனுக்குஉள்ளது.

வீரப்பனின் உதவியுடன் நெடுமாறன், நக்கீரன் நிருபர் சிவ சுப்பிரமணியத்தை விடுவிக்க இந்தத் தலைவர்கள் முயல்கிறார்கள்.

இதன்மூலம் புலிகளை ஒடுக்கும் ஜெயலலிதாவின் தேசப் பற்று மிகுந்த நடவடிக்கைகளை குலைக்க முயற்சி நடக்கிறது என்று சு.சுவாமிகூறியுள்ளார்.

ரஜினி தான் காரணம்:

இது குறித்து அகில இந்திய முஸ்லீம் லீக் பொதுச் செயலாளர் அசிமுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வீரப்பனுக்கு எதிராக பெங்களூரில்போய் தேவையில்லாமல் பேசினார் ரஜினிகாந்த்.

இப்போது இந்தக் கடத்தலுக்கு அவர் தான் பொறுப்பேற்ற வேண்டும். ராஜ்குமார் கடத்தல் தொடர்பாக பேசிய ரஜினி இப்போதும் பேசவேண்டும் என்று கூறியுள்ளார்.

Puneet Rajkumarராஜ்குமார் மகன் பேட்டி:

இது குறித்து ராஜ்குமாரின் மூன்றாவது மகனும் நடிகருமான புனித் கூறுகையில், 2 ஆண்டுகளுக்கு முன் எங்கள் குடும்பத்துக்கு ஏற்பட்டநிலைமை இன்று நாகப்பா குடும்பத்துக்கு ஏற்பட்டுள்ளது. கர்நாடக, தமிழக அரசுகள் என்ன போலீஸ் நடவடிக்கைகள் எடுக்கின்றன என்றுதெரியவில்லை. நாகப்பாவை விடுவிக்க இரு மாநில அரசுகளும் முயற்சி எடுக்க வேண்டும் என்றார்.

இந்த புனித் நடித்த அப்பு என்ற கன்னடப் படத்தின் நூறாவது நாள் விழாவில் தான் வீரப்பனைப் பற்றி கன்னடத்தில் திட்டித் தீர்த்தார் ரஜினிகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X