For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் நாகப்பாவை கொல்வேன்: கேசட்டில் வீரப்பன் மிரட்டல்

Google Oneindia Tamil News

ஈரோடு:

கன்னட நடிகர் ராஜ்குமாரை விடுவித்தபோது எனக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அந்தக்கோரிக்கைகளை நிறைவேற்றுவதுடன் சிறையில் உள்ள பழ.நெடுமாறன் உள்ளிட்ட தமிழ் தேசியவாத இயக்கத்தினரை விடுவிக்கவேண்டும் என வீரப்பன் கோரிக்கை விடுத்திருப்பதாகக் தெரிகிறது.

நாகப்பாவைக் கடத்தியபோது வீரப்பனே அவரது மனைவியிடம் ஒரு கேசட் மற்றும் கடிதம் தந்துவிட்டுச் சென்றதாகக்கூறப்பட்டது. ஆனால், உண்மையில் இரு கேசட்டுகளைத் தந்துள்ளான் வீரப்பன். ஒன்றில் கன்னடத்தில் பேசியுள்ள அவன்இன்னொன்றில் தமிழில் பேசியுள்ளான். இரு மாநில அரசுகளுக்கும் தலா ஒரு கேசட் தந்துவிட்டுச் சென்றுள்ளான்.

அதில் உள்ள விவரங்களை வெளியிட கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்தக் கேசட் அதிரடிப்படையிடம்ஒப்படைக்கப்பட்டுவிட்டதாகக் கூறிக் கொண்டிக்கிறது கர்நாடக அரசு.

அந்தக் கேசட்டில் காவிரி, திருவள்ளுவர் சிலை விவகாரங்கள் குறித்தும் வீரப்பன் பேசி இருப்பதால் கர்நாடக அரசு உண்மையைமூடி மறைப்பதாகத் தெரிகிறது.

ஆனால், நாகப்பாவின் வீட்டினர் அதை போட்டுக் கேட்டுள்ளனர். அவர்கள் வீட்டிலிருந்து கிடைத்த தகவலின்படி, இந்த கேசட் 55விநாடிகள் ஓடுகிறது என்று தெரியவந்தது. அதில் ராஜ்குமாரை விடுதலை செய்தபோது தனக்குக் கொடுக்கப்பட்ட உறுதிமொழிகளைகர்நாடக அரசு நிறைவேற்றத் தவறிவிட்டதால் நாகப்பாவைக் கடத்தியுள்ளதாக வீரப்பன் தெரிவித்துள்ளான்.

(காவிரிப் பிரச்சனையில் தமிழகத்தின் நலனை கர்நாடகம் புறக்கணிப்பது, பெங்களூரில் ஏரிக் கரையில் மூடப்பட்டுக் கிடக்கும்திருவள்ளுவர் சிலையைத் திறப்பது போன்ற விஷயங்களைத் தான் ராஜ்குமாரைக் கடத்தியபோது முக்கியப் பிரச்சனைகளாகக்கிளப்பினான் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அவனுக்கு சில உறுதிமொழிகளை கர்நாடக அரசு தந்ததாகத் தெரிகிறது. இதைத்தான் இப்போது அவன் நினைவூட்டியுள்ளான்.)

மேலும் தமிழக அரசு பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன்,கொளத்தூர் மணி, நக்கீரன் நிருபர் சிவசுப்பிரமணியம் ஆகியோரை விடுவிக்க வேண்டும் என்றும் அவன் கோரியுள்ளதாகத்தெரிகிறது.

மேலும் அதிரடிப் படையினரின் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் வீரப்பன் கூறியுள்ளான்.அதிரடிப்படையினரின் நடவடிக்கைகள் தொடர்ந்தால் நாகப்பாவைக் கொன்றுவிடுவேன் என்றும் வீரப்பன் மிரட்டியுள்ளான்.

என்னை தொடர்ந்து ஏமாற்றி வரும் வாக்குத் தவறிவிட்ட அரசுகளுக்கு பாடம் புகட்டுவேன் என்றும் கூறியுள்ளான்.

இறுதியாக, எனது கோரிக்கைகள் குறித்து மேலும் விவரமாக அடுத்த கேசட்டில் பேசுவேன். விரைவில் அது உங்களுக்கு வந்துசேரும் என்று குறிப்பிட்டுள்ளான் வீரப்பன் என்று நாகப்பா வீட்டினருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X