For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வீரப்பன் கோரிக்கை நிராகரிப்பு: தேடுதல் வேட்டை தீவிரம்

Google Oneindia Tamil News

ஈரோடு:

அதிரடிப்படைகளின் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற வீரப்பனின் நிபந்தனையை இரு மாநில அரசுகளும்புறக்கணித்துள்ளன. அவனைத் தேடும் பணியில் தமிழக, கர்நாடக அதிரடிப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இரு மாநிலப் படைகளுக்கும் தேவாரம் தலைமையேற்று இந்தத் தேடுதல் வேட்டையை நடத்தி வருகிறார். அவருடன் கர்நாடக மாநிலபோலீஸ் அதிகாரிகள் நேற்றும் இன்றும் ஆலோசனை நடத்தினர்.

40 கம்பெனிகள் கொண்ட அதிரடிப் படையினர் காட்டுப் பகுதியின் பல்வேறு பகுதிகளில் தனித்தனியே தேடுதல் வேட்டையில்ஈடுபட்டுள்ளதாக தமிழக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இந் நிலையில் ஈரோடு அருகே எஸ்.எஸ். மகால் முகாமில் நிருபர்களிடம் பேசிய தேவாரம், வீரப்பனிடம் கோடிக்கணக்கில் பணம் உள்ளது.அதை வைத்து கூலிக்கு ஆள் பிடிக்க முயன்று வருகிறான். அவனது கும்பலில் சேத்துக்குளி கோவிந்தன், சந்திரே கெளடா ஆகியோர் மட்டும்தான் உள்ளனர்.

நேற்று கடத்துலுக்கு உதவியவர்கள் கூலியாட்கள் தான். நாகப்பாவைக் கடத்தியதன் மூலம் மீண்டும் தனது கும்பலின் எண்ணிக்கையைஅதிகரிக்க வீரப்பன் முயல்கிறான். இதனால் தன்னிடம் மற்றவர்கள் வந்து சேருவார்கள் என்று நினைக்கிறான்.

அவனைப் பிடிக்கும் முயற்சிகள் தொய்வில்லாமல் தான் நடந்து வருகின்றன. இப்போதும் தீவிர வேட்டையில் தான் அதிரடிப்படைஈடுபட்டுள்ளது என்றார்.

அதிரடிப்படையின் தேடுதல் வேட்டையை நிறுத்தாவிட்டால் நாகப்பாவை தலையை வொட்டிக் கொல்வேன் என வீரப்பன்மிரட்டியுள்ளான். அவனது மிரட்டலை இரு மாநில அரசுகளும் கண்டுகொள்ளவில்லை. தேடுதலை தீவிரப்படுத்தியிருக்கின்றன.

காட்டுப் பகுதியில் டி.ஜி.பி, கமிஷ்னர்:

இந் நிலையில் வீரப்பன் காட்டுப் பகுதிக்கு தமிழக டி.ஜி.பி. நெயில்வால் மற்றும் முன்னாள் அதிரடிப்படையின் துணை கமாணடன்டாகஇருந்த இப்போதைய சென்னை நகர கமிஷ்னர் விஜயகுமாரும் விரைந்துள்ளனர்.

தேவராத்துக்கு விஜய்குமார் சில க்ளூக்களைத் தந்து உதவுவார் என்று தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X