பாவாணன் வீட்டில் போலீஸ் "ரெய்ட்"
புதுக்கோட்டை:
"பொடா" சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள தமிழர் மன்ற அமைப்பாளரும் கவிஞருமான பாவாணனின்வீட்டில் இன்று "கியூ" பிராஞ்ச் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
மதிமுகவின் முன்னாள் பேச்சாளரான பாவாணன் விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதாக கடந்த ஜூலைமாதம் கைது செய்யப்பட்டார்.
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அவர் பின்னர் கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.சமீபத்தில் தான் பாவாணனின் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் புதுக்கோட்டையில் உள்ள அவருடைய வீட்டிலும் தொழிற்சாலையிலும் போலீசார் இன்று காலைஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டனர்.
இதற்காக ஈரோட்டைச் சேர்ந்த 15 போலீசார் இன்று அதிகாலையிலேயே புதுக்கோட்டை புறப்பட்டுச் சென்றனர்.
சோதனையின் போது பாவாணனின் வீட்டில் அவருடைய மனைவியும், மைத்துனரும் மட்டுமே இருந்தனர்.
இன்று காலையில் தொடங்கிய சோதனை இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.