For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீண்டும் முன் ஜாமீன் கேட்கிறார் தாமரைக்கனி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் மீண்டும் முன் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தைஅணுகியுள்ளார் முன்னாள் எம்.எல்.ஏ. தாமரைக்கனி.

முன்னாள் அதிமுக எம்.எல்.ஏவான தாமரைக்கனி தற்போது திமுகவில் உள்ளார்.

சென்னையில் நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் ஜெயலலிதா குறித்து அவர் மிக அவதூறாகப் பேசினார். இதையடுத்து போலீசார் தாமரைக்கனி மீதுவழக்குத் தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கில் தன்னைக் கைது செய்யாமல் இருப்பதற்காக முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றதில்மனு செய்திருந்தார் தாமரைக்கனி.

ஆனால் அந்த மனு நிராகரிக்கப்பட்டு விட்டது. இந் நிலையில் மறுபடியும் முன் ஜாமீன் கோரி மனு செய்துள்ளார்.

இதன் மீதான விசாரணை வியாழக்கிழமை நடைபெறுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X