பழைய வழக்கில் வைகோவுக்கு கோர்ட் சம்மன்
சென்னை:
1983ம் ஆண்டு நடந்த திமுக, அதிமுக மோதல் தொடர்பான வழக்கில் வரும் 17ம் தேதி மயிலாடுதுறை கோர்ட்டில்ஆஜராகுமாறு வைகோவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பொடா வழக்கில் கைதாகி இப்போது வேலூர் சிறையில் இருந்து வருகிறார்.
கடந்த 1983ம் ஆண்டு மயிலாடுதுறையில் நடந்த தேர்தலின்போது, திமுக மற்றும் அதிமுகதொண்டர்களுக்கிடையே மோதல் நடந்தது. இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி, வைகோஉள்ளிட்டவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டது.
இத்தனை வருடங்களாக தூங்கிக் கிடந்த அந்த வழக்கு தற்போது தூசு தட்டப்பட்டு மீண்டும் விசாரணைக்குவந்துள்ளது. மயிலாடுதுறை குற்றவியல் கோர்ட்டில் வரும் 17ம் தேதி வைகோ உள்ளிட்டவர்கள் ஆஜர்படுத்தப்படவேண்டும் என்று நீதிபதி ராஜ்குமார் உத்தரவிட்டார்.
இதையடுத்து வேலூர் சிறையில் இருக்கும் வைகோ மயிலாடுதுறை கோர்ட்டுக்கு 17ம் தேதி கொண்டுசெல்லப்படுவார்.
வைகோ- கண்ணப்பன் சந்திப்பு:
இதற்கிடையே வைகோவை மத்திய எரிசக்தித் துறை இணை அமைச்சர் கண்ணப்பன் சிறையில் சந்தித்துப்பேசினார்.
வைகோவின் சிறை வாசம் வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் கட்சியின் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்காக மத்தியஅமைச்சர் கண்ணப்பன் வேலூர் சிறைக்குச் சென்று வைகோவைச் சந்தித்துப் பேசினார்.