திண்டுக்கல்லில் விநாயகர் கோவில் இடிப்பு
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் அரசு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு வளாகத்தில் கட்டப்பட்டிருந்த விநாயகர் கோவிலைஅதிகாரிகள் இடித்துத் தள்ளியதால் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் ராணி மங்கம்மாள் நகரில் அரசு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு உள்ளது. இந்த வளாகத்திற்குள்விநாயகர் கோவில் ஒன்று உள்ளது. இக்கோவிலை, ராணி மங்கம்மாள் நகர் பெண்கள் சங்கத்தினர் கட்டியுள்ளனர்.
விநாயகர் கோவில் இடம் அரசுக்குச் சொந்தமானது என்றும், ஆக்கிரமித்து கோவில் கட்டப்பட்டுள்ளதாகவும் கூறிஇந்தக் கோவிலை வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் இடித்துத் தள்ளினர்.
விநாயகர் கோவில் இடித்துத் தள்ளப்பட்டதை அறிந்த பெண்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஏராளமான அங்குதிரண்டு உதவிப் பொறியாளருக்கு எதிராக கோஷமிட்டனர். பின்னர் அவரது வீட்டின் முன் திரண்டு ஆர்ப்பாட்டம்நடத்தினர்.
இதையடுத்து அதிகாரிகள் விரைந்து வந்து அவர்களைச் சமாதானப்படுத்தினர். வேறு இடத்தில் கோவில் கட்டிக்கொள்ள அனுமதி தருவதாக உறுதியளித்துள்ளனர்.
-->