For Daily Alerts
Just In
திருவண்ணாமலைக்கு கிரிவல சிறப்பு ரயில்
சென்னை:
சென்னையிலிருந்து ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தன்று திருவண்ணாமலைக்கு கிரிவலம் போகும் பக்தர்கள்வசதிக்காக சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படவுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் செய்தியாளர்களிடம் மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஏ.கே. மூர்த்திபேசுகையில்,
திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்உள்ளது.
எனவே பக்தர்களின் வசதிக்காக மாதந்தோறும் பவுர்ணமி தினத்தன்று கிரிவல சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்சென்னையிலிருந்து விடப்படும்.
இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மதுராந்தகம், திண்டிவனம், விழுப்புரம் ஆகிய நிலையங்களில் நின்றுசெல்லும்.
சென்னை முதல் திருச்சி வரை 4 வழி ரயில் பாதை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போதுசெங்கல்பட்டு வரை பணிகள் முடிந்து விட்டன என்றார் மூர்த்தி.
-->
Story first published: Wednesday, September 11, 2002, 5:30 [IST]