For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போலி நிதி நிறுவன மோசடிகள்: ஒரு புள்ளி விபரம்

By Staff
Google Oneindia Tamil News

திண்டுக்கல்:

நிதி நிறுவன மோசடியில் சிக்கி பணத்தை இழந்த முதலீட்டாளர்களுக்கு இதுவரை ரூ.430 கோடி வரை திருப்பிக்கொடுக்கப்பட்டு விட்டதாக பொருளாதார குற்றத்தடுப்புத் துறை ஐ.ஜி. ஷியாம் சுந்தர் தெரிவித்தார்.

திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை மொத்தம் ரூ.430 கோடி வரையிலான தொகை முதலீட்டாளர்களுக்கு திரும்பித்தரப்பட்டுள்ளது.

சுமார் 12 லட்சம் மக்களிடமிருந்து மொத்தம் ரூ.1,047 கோடி அளவுக்கு மோசடி செய்யப்பட்டுள்ளது.

போலி நிதி நிறுவனங்களிடம் ரூ.1,064 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. மொத்தம் 6 லட்சத்து 40,000 பேர்இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 265 வழக்குகளில் புலன் விசாரணை நடந்து வருகிறது. மற்ற வழக்குகள்நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.

திண்டுக்கல் நீதிமன்றத்தில் 12 வழக்குகள் வந்துள்ளன. இங்கு ரூ.10 கோடிக்கு மோசடி செய்யப்பட்டுள்ளது. இங்கு3,083 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X