விநாயகருக்கு மாலை அணிவித்த முஸ்லீம் பிரமுகர்
பழனி:
பழனியில் விநாயகர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மத சகிப்புத்தன்மைக்கு உதாரணமாக விளங்கினார்அவ்வூரைச் சேர்ந்த முஸ்லீம் ஒருவர்.
விநாயகர் சதுர்த்தி வருகிறது என்று சொன்னாலே, அதைத் தொடர்ந்து விநாயகர் சிலை ஊர்வலம், அதுதொடர்பான கலாட்டாக்கள் தான் நினைவுக்கு வரும்.
ஆனால் இதுபோன்ற சிக்கல்களை எப்படி தவிர்க்கலாம் என்பதற்கு சிறந்த உதாரணமாக பழனியைச் சேர்ந்த ஒருமுஸ்லீம் சகோதரர் விளங்கியுள்ளார்.
பழனியில் நேற்று விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. சிவசேனா கட்சி இந்த ஊர்வலத்தை நடத்தியது.
பாதவிநாயகர் கோவிலில் இருந்து கிளம்பிய ஊர்வலம், அந்தப் பகுதியில் உள்ள மசூதியை நெருங்கியபோது,மசூதியின் தர்மபரிபாலன சங்க செயலாளரான ஷாகுல் ஹமீது மாலைகளுடன் வந்தார்.
ஊர்வலத்தில் இருந்த 14 சிலைகளுக்கும் அவர் மாலை அணிவித்து எல்லோரையும் ஆச்சரியப்படுத்தினார்.ஊர்வலத்தில் வந்து கொண்டிருந்த சிவசேனா தொண்டர்களும் கூடியிருந்த மக்களும் இதைக் கண்டு மிகவும்நெகிழ்ந்து போயினர்.
தொடர்ந்து சென்ற ஊர்வலம் பல்வேறு தெருக்கள் வழியாக சென்ற பிறகு அங்குள்ள ஒரு குளத்தில் விநாயகர்சிலைகள் கரைக்கப்பட்டன.