சென்னையில் விநாயகர் சிலை ஊர்வலங்கள்: இன்று தொடக்கம்
சென்னை:
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சென்னையில் விநாயகர் சிலைகள் ஊர்வலத்திற்கு சில அமைப்புகளுக்குமட்டும் மாநகர காவல்துறை கடுமையான கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்துள்ளது.
முக்கிய சாலைகளில் பேரணிகள், ஊர்வலங்கள் நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருப்பதால்,அதற்கேற்றபடி விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
ராமகோபாலனின் இந்து முன்னணி (15ம் தேதி), சிவசேனா (ராதாகிருஷ்ணன் பிரிவு, 12ம் தேதி), இந்து மக்கள்கட்சி (ஸ்ரீதரன் பிரிவு, 14ம் தேதி), சிவசேனா (ரவிக்குமார் பிரிவு, 14ம் தேதி), ஸ்ரீகணேஷ் மஹோத்சவா மண்டல்,ஸ்ரீமகாராஷ்டிர மித்ரா மண்டல டிரஸ்ட், ஸ்ரீசின்ன நாயகரன் வியாபாரிகள் சங்கம், சூளை வியாபாரிகள் சங்கம்(அனைத்தும் 15ம் தேதி) ஆகியவற்றிற்கு மட்டுமே விநாயகர் சிலைகளை எடுத்துச் சென்று கரைக்க அனுமதிஅளிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டுடன், கொடுக்கப்பட்ட பாதைகளில் மட்டும், கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் விநாயகர் சிலைகளைஊர்வலமாக எடுத்துச் செல்ல வேண்டும். கட்டுப்பாடுகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றுகாவல்துறை எச்சரித்துள்ளது.