கருணாநிதியை விமர்சிப்பதா? - தி.க. எச்சரிக்கை
சென்னை:
தமிழில் மந்திரம் ஓதப்படும் சர்ச்சை குறித்து திமுக தலைவர் கருணாநிதியை விமர்சித்தால் அதை நாங்கள்வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என்று திராவிடர் கழக தலைவர் வீரமணி எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
இது தொடர்பாக வீரமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
மேடை மேடையாக தந்தை பெரியார் கேட்ட கேள்விகளைத் தான் கருணாநிதியும் கேட்டுள்ளார்.
ஆனால் கருணாநிதியைத் தானே சிலர் தாக்கிப் பேசுகிறார்கள் என்று திராவிடர் கழகமோ தமிழர்களோஅமைதியாக இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.
கடவுள் இல்லை என்று கூறுபவர்களுக்கு ஏன் இந்தக் கவலை என்று கேட்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதுபோன்ற கேள்விகளுக்கு பல முறை நாங்கள் மேடைகளில் பதிலளித்துள்ளோம்.
நாத்திகமா அல்லது ஆத்திகமா என்பதல்ல இப்போதைய பிரச்சனை. கடவுள் இல்லை என்று கூறுவதுநாத்திகர்களின் கொள்கைப் பிரச்சனை.
ஆனால் தன் மொழிக்கும் தன் இனத்துக்கும் அவமானம் ஏற்படக் கூடாது என்பது மனித உரிமைப் பிரச்சனை.
இந்த சிறு பொறியை ஊதினால் தமிழகத்தில் அது பெருந்தீயாக மாறும். ஜாதி மற்றும் கட்சிக் கண்ணோட்டம் இன்றிமனித உரிமை, மொழி உரிமை மற்றும் இன உணர்வுள்ள அனைவரும் ஓரணியில் திரள்வார்கள் என்பது மட்டும்நிச்சயம் என்று வீரமணி அவ்வறிக்கையில் கூறியுள்ளார்.
""தமிழ் மந்திரம் புரியாத கடவுளை ஏன் வணங்க வேண்டும்?"" - கருணாநிதி