For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாகப்பாவை மீட்க காட்டுக்குள் போகிறார் கொளத்தூர் மணியின் தம்பி?

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

கடத்தப்பட்ட கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவை மீட்பதற்காக பெரியார் திராவிடர் கழகத்தின்தலைவரான கொளத்தூர் மணியின் தம்பியை வீரப்பனிடம் தூதராக அனுப்ப கர்நாடக அரசு முடிவுசெய்துள்ளதாகத் தெரிகிறது.

இது தொடர்பாக பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டுள்ள கொளத்தூர் மணியுடன் கர்நாடக அதிரடிப்படைஅதிகாரி நேற்று மாலை பேச்சு நடத்தியுள்ளார்.

இதுகுறித்து அந்த அதிகாரி மூலம் தன் தம்பி பழனிச்சாமிக்கு ஒரு கடிதத்தை கொளத்தூர் மணி அனுப்பியுள்ளார்.பழனிச்சாமி தூதராகச் செல்ல வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் மணி தெரிவித்துள்ளார்.

மேலும் வீரப்பனிடம் கொடுத்து விடுமாறு கூறி ஒரு கேசட்டையும் பழனிச்சாமிக்கு மணி அனுப்பியுள்ளார்.கர்நாடகத்தில் உள்ள லட்சக்கணக்கான தமிழர்கள் நிம்மதியாக வாழ வேண்டுமானால் உடனடியாக நாகப்பாவைவிடுதலை செய்ய வேண்டும் என்று அந்தக் கேசட்டில் வீரப்பனுக்கு மணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதையடுத்து பழனிச்சாமியைத் தூதராக அனுப்புவது என்று கர்நாடக அரசும் முடிவெடுத்து விட்டதாகத்தெரிகிறது.

இது தொடர்பாக பழனிச்சாமியிடம் கர்நாடக அரசு பேச்சு நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் சிறையில் உள்ள கொளத்தூர் மணியை பழனிச்சாமி சந்தித்து இதுகுறித்து பேசியதாக அவருடையகுடும்பத்தினர் இன்று தெரிவித்தனர்.

முன்னதாக கொளத்தூர் மணி மற்றும் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் ஆகியோர் சிறைகளில்இருப்பதால் அவர்களைத் தூதராக அனுப்புவது சரியாக இருக்காது என்று கர்நாடக உள்துறை அமைச்சரானமல்லிகார்ஜுன கார்கே நேற்றே கூறிவிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X