சங்கராச்சாரியார் தமிழை பழிக்கலாமா?: தமிழ் அமைப்புகள் கேள்வி
சென்னை:
தமிழ் வழிபாட்டுக்கும், தமிழ் குடமுழக்குக்கும் எதிர்ப்பு தெரிவித்து தமிழுக்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுவதை காஞ்சிப்சங்கராச்சாரியார் உடனடியாகக் கைவிட வேண்டும் என தமிழர் அமைப்புகள் கூறியுள்ளன.
பன்னாட்டுத் தமிழுறவு மன்றம், தலைநகர் தமிழச் சங்கம் உள்ளிட்ட தமிழர் அமைப்புகள் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில்,
கரூர் அருகே திருமுக்கூடலூரில் தமிழ் மந்திரங்களை அர்ச்சித்து குடமுழுக்கு செய்ய விரும்பிய மக்களை அக் கோவில் அர்ச்சகர்கள்கேவலப்படுத்தியுள்ளனர். தமிழில் மந்திரம் சொன்னால் நாட்டுக்குக் கேடு வரும் என்று கேடு கெட்டத்தனமாகப் பேசி தமிழையும்தமிழனையும் கேவலப்படுத்தியுள்ளனர்.
இந்த அர்ச்சகர்களின் கருத்தை காஞ்சி சங்கராச்சாரியாரும் ஆமோதித்தது பெரும் வருத்தம் தருகிறது. நாத்திகரான கருணாநிதிக்கு கடவுள்குறித்துப் பேச தகுதியில்லை என்று கூறியுள்ள சங்கராச்சாரியாருக்கு கோவிலில் தமிழைப் பயன்படுத்தினால் அவமானம் என்று கூறும்உரிமையைத் தந்தது யார்?
தமிழக கோவில்களில் தமிழை பயன்படுத்த உரிமை இல்லை என்றால் வேறு யாருக்கும் இங்கு உரிமை இல்லை.
தமிழகத்தில் தமிழ் மக்கள் தமிழில் வழிபடுவது பிறப்புரிமை. இதில் சங்கராச்சாரியார் தலையிட உரிமை இல்லை.
ஜெயேந்திரர் மட்டுமல்ல, தமிழ் நாட்டில் வாழ்ந்து கொண்டு தமிழைப் பழிக்கும் அனைத்து ஆன்மிகவாதிகளும் இந்தப் போக்கை உடனேகைவிடுவது நல்லது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
""தமிழ் மந்திரம் புரியாத கடவுளை ஏன் வணங்க வேண்டும்?"" - கருணாநிதி