For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்நாடகா சாலை விபத்தில் 9 தமிழர்கள் பலி

By Staff
Google Oneindia Tamil News

கோலார்:

கர்நாடக மாநிலம் கோலார் அருகே ஒரு வேனும் லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்ட விபத்தில்தமிழகத்தின் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த 9 தமிழர்கள் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த சுமார் 30 பேர் பெங்களூரில் உள்ள தங்கள் உறவினரின் திருமண விழாவில் கலந்துகொள்ள ஒரு டெம்போ வேனில் சென்றனர்.

பின்னர் அவர்கள் மீண்டும் குடியாத்தம் நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த போது, கோலார் அருகே எதிரே வந்தலாரியுடன் அவர்கள் வந்த வேன் நேருக்கு நேராகப் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் வேனுக்குள் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதில் 9 பேர் வரை உடல் நசுங்கி உயிரிழந்தனர்.மேலும் பத்துக்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து கோலார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் 2 விபத்துகளில் 6 பேர் பலி

இதற்கிடையே தமிழகத்தில் ஏற்பட்ட 2 சாலை விபத்துக்களில் 3 பெண்கள் உள்பட 6 பேர் பலியானார்கள்.

தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே 30 பேர் ஒரு லாரியில் சென்று கொண்டிருந்தனர். திருவிழாவுக்காக இவர்கள்சென்று கொண்டிருந்தனர்.

மதுக்கூர் அருகே சென்றபோது அந்த லாரி திடீரென்று கவிழ்ந்தது. இதில் ஒரு பெண் உள்பட இரண்டு பேர் சம்பவஇடத்திலேயே பலியாயினர்.

அதேபோல, திருச்சியிலிருந்து சென்னைக்கு வந்த அரசு பஸ்சும், நெய்வேலியிலிருந்து திருச்சிக்கு சென்ற லாரியும்பெரம்பலூர் அருகே உள்ள சின்னாறு என்ற இடத்தில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இதில் இரண்டு பெண்கள் உள்பட நான்கு பேர் பலியாயினர். மேலும் 14 பேர் காயமடைந்தனர்.காயமடைந்தவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இரு விபத்துக்கள் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X