For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திமுக முன்னாள் எம்.எல்.ஏ. வெட்டிக் கொலை: திருப்பத்தூரில் பதற்றம்

By Staff
Google Oneindia Tamil News

வேலூர்:

திருப்பத்தூர் முன்னாள் திமுக எம்.எல்.ஏவான சண்முகம் குடும்பத் தகராறில் படுகொலை செய்யப்பட்டார்.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏவான சண்முகத்திற்கும் அவருடைய தம்பிகுடும்பத்திற்கும் பகை ஏற்பட்டிருந்தது.

இந்தப் பகை காரணமாக சில மாதங்களுக்கு முன்பு சண்முகத்தின் தாயாரை அவருடைய தம்பியின் மகன்மணிகண்டன் வெட்டிப் படுகொலை செய்தார். இதுதொடர்பாக அவர் கைது செய்யப்பட்டிருந்தார். சிலநாட்களுக்கு முன்பு அவர் ஜாமீனில் விடுதலையாகி வந்திருந்தார்.

இந்த நிலையில், திருப்பத்தூர் பஸ் நிலையம் அருகே நேற்று இரவு சண்முகம் வந்து கொண்டிருந்தபோதுமணிகண்டன் அவரை வழிமறித்தார். பின்னர் சண்முகத்தை அவர் சரமாரியாக வெட்டித் தள்ளினார்.

படுகாயமடைந்து ரத்தவெள்ளத்தில் மிதந்த சண்முகத்தை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்து விட்டார்.

சண்முகத்தை வெட்டி விட்டுத் தப்பியோட முயன்ற மணிகண்டனை போலீஸார் விரைந்து வந்து பிடித்தனர்.

சண்முகம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பத்தூரில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. கடைகள்அடைக்கப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கிய இடங்களில் போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X