ராஜபாளையம் பஞ்சு மில்லில் பயங்கர தீ: ரூ. 1 கோடி நாசம்
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள தனியார் ஜின்னிங் மில் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் ரூ.1கோடி மதிப்புள்ள பஞ்சு மூட்டைகள், மில் ஆகியவை எரிந்து நாசமாயின.
ராஜபாளையத்தை அடுத்துள்ள சொக்கலிங்கபுரத்தில் இந்த தனியார் பஞ்சு மில் உள்ளது. இங்கு ஞாயிற்றுக்கிழமைஇரவு திடீரென்று தீவிபத்து ஏற்பட்டது.
பஞ்சுப் பொதிகள் அடங்கிய மூட்டைகளில் ஏற்பட்ட தீ, மளமளவென மில் முழுவதும் பரவியது. இதில் ரூ.1 கோடிமதிப்புள்ள பஞ்சு மூட்டைகள் மற்றும் மில்லின் பாதிப்பகுதி ஆகியவை எரிந்து சாம்பலாயின.
கடுமையான வறட்சி காரணமாக இப்பகுதியில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதால் தீயை அணைப்பதற்குப்போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை.
இதனால் ராஜபாளையம் மட்டுமில்லாமல் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பு ஆகிய இடங்களிலிருந்ம்ஏராளமான தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து சுமார் 10 மணி நேரத்திற்கும் மேல் போராடி தீயைஅணைத்தன.
-->