For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"வீரப்பனிடம் தூது போக மாட்டேன்": கோபால்

By Staff
Google Oneindia Tamil News

ஈரோடு:

வீரப்பனை சந்திக்க தூதராக இந்த முறை நான் செல்ல மாட்டேன் என்று "நக்கீரன்" கோபால் கூறினார்.

கடந்த 1998ம் ஆண்டு "நெற்றிக்கண்" ஆசிரியர் மணி, நிருபர் பாயும் புலி, போட்டோகிராபர் ரிச்சர்ட், சட்டக்கல்லூரி பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை வீரப்பன் கடத்தியது தொடர்பான வழக்கில் சத்தியமங்கலம்நீதிமன்றத்தில் நேற்று கோபால் மற்றும் நிருபர் ஜீவா தங்கவேல் ஆகியோர் ஆஜராகினர்.

அப்போது கோபால் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

கடந்த முறை நடிகர் ராஜ்குமார் கட்டத்தப்பட்டபோது, மனிதாபிமான முறையில் நான் காட்டுக்குள் போனேன்.ராஜ்குமாரை விடுவிக்க வீரப்பன் நிபந்தனைகள் விதித்தான்.

ஆனால் அவற்றை நிறைவேற்ற இரு மாநில அரசுகளும் தவறி விட்டன. பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பேஇல்லாமல் போய் விட்டது.

முன்பை விட இப்போது நிலைமை மிகவும் மோசமாகி உள்ளது. இந்த முறை நான் தூது போக மாட்டேன். அதில்எனக்கு விருப்பமும் இல்லை என்றார் கோபால்.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X