385 காலியிடம்... 11 இடங்களில் போட்டியிட ஆள் இல்லை
சென்னை:
உள்ளாட்சி இடைத் தேர்தல் நடக்கவுள்ள 385 காலியிடங்களில் 11 இடங்களுக்கு வேட்பு மனுக்கள் தாக்கல்செய்யப்படவில்லை.
உள்ளாட்சி இடைத் தேர்தல் அடுத்த மாதம் 7ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்றுடன்முடிந்தது.
இதில் மதுரை மாவட்டம் நாட்டார்மங்கலம் மற்றும் வேலூர் மாவட்டத்தில் உள்ள 10 இடங்களில் வேட்புமனுக்களே தாக்கல் செய்யப்படவில்லை.
நாட்டார்மங்கலத்தை தனித் தொகுதியாக அறிவித்ததால் அங்கு மேல் ஜாதியினரின் கெடுபிடிகள் காரணமாகதாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த ஒருவரும் வேட்பு மனுத்தாக்கல் செய்ய முன்வரவில்லை. தொடர்ந்து 8வதுமுறையாக இங்கு யாரும் போட்டியிட முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல, வேலூரிலும் ஆறு வார்டுகள் தனி வார்டுகளாக அறிவிக்கப்பட்டதால் பெரும்பான்மை ஜாதியினரின்வற்புறுத்தலால் யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யவில்லை.
மற்ற நான்கு வார்டுகளில் பல்வேறு காரணங்களுக்காக யாரும் தேர்தலில் போட்டியிடவில்லை.
-->