நெடுமாறனுக்கு காவல் நீட்டிப்பு
சென்னை:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், அதன்செயலாளர் சுப. வீரபாண்டியன் மற்றும் மதிமுக மேடைப் பேச்சாளர் பாவாணன் ஆகியோரது காவல் அடுத்த மாதம்21ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வெவ்வேறு கோர்ட்டுகளில் அடைக்கப்பட்டுள்ள இந்த மூன்று பேருடைய நீதிமன்றக் காவல் இன்றுடன்முடிவடைகிறது.
இதையடுத்து மூவரும் பலத்த பாதுகாப்புடன் இன்று சென்னையை அடுத்துள்ள பூந்தமல்லியில் உள்ள பொடா தனிநீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டனர்.
அங்கு நீதிபதி ராஜேந்திரன் முன்பு அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களது காவலை அடுத்த மாதம் 21ம் தேதிவரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதற்கிடையே, நெடுமாறன், வீரபாண்டியன் மற்றும் பாவாணன் ஆகியோர் சார்பாக இன்று ஜாமீன் மனுக்கள்தாக்கல் செய்யப்பட்டன. இந்த ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை வரும் 30ம் தேதிக்கு ஒத்திவைத்தார்நீதிபதி ராஜேந்திரன்.
மேலும் இவர்கள் மூன்று பேர் மீதான முறையான குற்றப் பத்திரிக்கைகளைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசுவழக்கறிஞருக்கு நீதிபதி ராஜேந்திரன் உத்தரவிட்டார்.
-->