சென்னை-ஷார்ஜா விமான கழிவறையில் "ஆக்ஷா பிளேடு": கடத்த முயற்சியா?
சென்னை:
சென்னையிலிருந்து ஷார்ஜா செல்லும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் கழிவறையில் "ஆக்ஷா பிளேடு" கத்திகிடந்தது. இதனால் இந்த விமானத்தைக் கடத்த முயற்சி நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இன்று காலை இந்த விமானம் ஷார்ஜா கிளம்ப தயாராக இருந்தது. அப்போது அந்த விமானத்தின் பணியாளர்கள்அதன் கழிவறையில் சோதனை நடத்தியபோது அங்கு ஒரு துணி கிடந்தது. அதை எடுத்துப் பார்த்தபோது அதற்குள்"ஆக்ஷா பிளேடு" இருந்தது.
பிளேடு வெளியே தெரியாத வகையில் துணிக்குள் மறைத்து சுற்றப்பட்டிருந்தது.
இதையடுத்து விமான நிலைய போலீசாருக்கு ஊழியர்கள் தகவல் கொடுத்தனர். விமான நிலைய போலீசார்விரைந்து வந்து அதைக் கைப்பற்றினர். உடனே விமானத்தில் ஏற்றப்பட்ட அனைத்து சரக்குகளும் பயணிகளின்உடமைகளும் இறக்கப்பட்டன.
மேலும் அந்த விமானத்தில் இருந்த 73 பயணிகளும் உடனே கீழே இறக்கப்பட்டனர்.
பயணிகள் மீண்டும் சோதனையிடப்பட்டனர். அவர்களின் உடமைகளும் மீண்டும் சோதிக்கப்பட்டன. அதன்பின்னர் சுமார் 2 மணி நேர தாமதத்துக்குப் பின் அந்த விமானம் பறக்க அனுமதிக்கப்பட்டது. இதையடுத்து அந்தவிமானம் புறப்பட்டுச் சென்றது.
இதனால் அந்த விமானத்தைக் கடத்த முயற்சி நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இன்று இந்தவிமானத்தில் ஷார்ஜா சென்ற அனைத்துப் பயணிகளின் பின்னணி குறித்தும் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
-->