மின்சாரம் திருடியது ஆந்திரமா? கர்நாடகமா?
சென்னை:
ஆந்திரம் அல்லது கர்நாடகம் கூடுதல் மின்சாரத்தை எடுத்ததால்தான் தமிழகம் முழுவதும் நேற்று மின்வெட்டுஏற்பட்டதாக தமிழக மின் வாரிய அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
நேற்று காலை 10 மணியளவில் தமிழகம் முழுவதும் மின்வெட்டு ஏற்பட்டது. சென்னை முதல் கன்னியாகுமரி வரைஎங்குமே மின்சார வினியோகம் சுத்தமாக இல்லை. இதனால் காலையில் பேன் இல்லாமல் அவதிப்பட்ட தமிழகமக்கள், இரவில் மின் விளக்குகளும் இல்லாமல் நொந்து போயினர்.
இரவு 11 மணி வரை தமிழகமே இருளில் மூழ்கிப் போய் இருந்தது.
சென்னையில் தலைமைச் செயலகம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் மின் தடை ஏற்பட்டது. தூத்துக்குடி,எண்ணூ
தென்னக மின் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே திடீர் மின் வெட்டு ஏற்பட்டதாகத்தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அதை சரி செய்யும் பணியில் மின் வாரிய அதிகாரிகள் தீவிரமாகஈடுபட்டனர். சிறிது சிறிதாக மின் வினியோகம் சீரானது.
ஆனால், சீரான மின்சாரம் பிற்பகலில் மீண்டும் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது. அப்போது துண்டிக்கப்பட்டமின்சாரம் இரவு 11 மணிக்குத்தான் மீண்டும் வந்தது.
ஆந்திரம் அல்லது கர்நாடக மாநிலங்களில் ஏதாவது ஒன்று கூடுதல் மின்சாரத்தை எடுத்ததால் தான் தமிழகத்தில்மின் தடை ஏற்பட்டதாக தமிழக மின் வாரி அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் ஆந்திர மாநிலம் கர்நாடகத்தை குற்றம் சாட்டியுள்ளது. கர்நாடகமோ கேரளா மற்றும் தமிழகத்தையும்குற்றம் சாட்டியுள்ளது.
இரண்டாவது கோடை காலத்தில் சிக்கி அவதிப்பட்டு வரும் தமிழக மக்கள் இந்த திடீர் மின்வெட்டால் மிகவும்அவஸ்தைப்பட்டுவிட்டனர். நல்ல வேளையாக இரவிலாவது மின்சாரம் வந்து மக்களை நிம்மதியாக தூங்கவைத்தது.
இந் நிலையில் நெய்வேலி அனல் மின் நிலையத்தின் இரண்டாவது பிரிவில் கடந்த சில வாரங்களாகவே மின் உற்பத்திபாதிக்கப்பட்டுள்ளது. தீ விபத்து காரணமாக இந்த நிலை தொடர்கிறது. இதனால், தென்னக கிரிட்டில் போதி அளவு மின்சாரசப்ளை இல்லை என்றும் அதை உணராமல் அனைத்து தென்னக மாநிலங்களும் வழக்கம்போல மின்சாரத்தை உறிஞ்சியதாலும்ஒட்டுமொத்த கிரிட்டே குலைந்துவிட்டதாகவும் சில அதிகாரிகள் தெரிவித்தனர்.