ஆண்டிப்பட்டியில் பாட்டிலில் அடைத்து வீசப்பட்ட 11 சிசுக்கள்
தேனி:
முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆண்டிப்பட்டிக்கு அருகே குப்பைகளுக்கு மத்தியில் பாட்டில்களில்அடைத்து வீசப்பட்டிருந்த 11 சிசுக்கள் குறித்து விரிவான அறிக்கை அளிக்குமாறு மாவட்ட கலெக்டர் அதுல்ஆனந்த்திற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆண்டிப்பட்டி சுடுகாட்டுக்கு அருகே இந்த 11 பாட்டில்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இது அந்தப் பகுதியையேபெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதுகுறித்து விரிவான அறிக்கை தருமாறு மாவட்ட கலெக்டருக்குசுகாதாரத்துறை அமைச்சர் செம்மலை உத்தரவிட்டுள்ளார்.
முதல்வரின் தொகுதியில் இந்த சிசுச்கள் போடப்பட்டிருப்பதைப் பார்த்தால், விஷமிகளின் சதியாகக் கூடஇருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில் மாதிரிக்காக (specimens) வைக்கப்பட்டிருக்கும் சிசுக்கள் இவைஎன்பதால் மாவட்டத்திலுள்ள அனைத்து மருத்துவமனைகள், கிளினிக்குகள் மற்றும் ஆய்வகங்களில் போலீஸார்தீவிர விசாரணை நடத்தினர்.
ஆனால் அங்கிருந்து எந்த specimen-னும் காணாமல் போகவில்லை என்று தெரியவந்துள்ளதாக மாவட்ட காவல் துறைக்கண்காணிப்பாளர் அமல்ராஜ் கூறினார்.
கைப்பற்றப்பட்ட 11 பாட்டில்களில் 2 பாட்டில்களில் ஆண் சிசுக்களும்,8 பாட்டில்களில் பெண் சிசுக்களும்இருந்தன. மற்றொரு பாட்டிலில் இருந்த சிசுவை அடையாளம் காண முடியவில்லை.
ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி ஆகிய மதுரை மாவட்ட ஊரகப் பகுதிகளில் சிசுக் கொலைகள் நடப்பது சர்வ சாதாரணம் என்பதுகுறிப்பிடத்தக்கது. குறிப்பாக பெண் சிசுக்களைக் கொல்வதை இநத்ப் பகுதி கிராமத்தினர் ஒரு பெரிய விஷயமாகவேகருதுவதில்லை.
-->