For Daily Alerts
Just In
ஈரோடு நீதிமன்றத்தில் பாவாணன் குரல் பதிவு
ஈரோடு:
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் மதிமுக பேச்சாளரான பாவாணனின்குரல் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்டம் கவுந்தம்பாடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக பாவாணன் மீதுவழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சமீபத்தில் கைது செய்யப்பட்ட அவர் தற்போது கோயம்புத்தூர்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பொதுக்கூட்டத்தில் பாவாணன் பேசியது ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தக் குரல் அவருடையது தானாஎன்பதைப் பரிசோதிப்பதற்காக சிறையிலிருந்து ஈரோடு கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டார் பாவாணன்.
நீதிபதி ராமலிங்கம் முன்பு அவரது குரல் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் மறுபடியும் கோயம்புத்தூர்சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
-->
Comments
Story first published: Sunday, September 29, 2002, 5:30 [IST]