For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சி.டி. பிளேயரை திருடியவரை விரட்டிப் பிடித்த மதுரை மக்கள்

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த சி.டி. பிளேயர் அடங்கிய பையை திருடிக்காண்டு ஓடியவரை வில்லாபுரம் பகுதி வரை ஓட ஓட விரட்டி பொதுமக்கள் பிடித்து போலீஸிடம் ஒப்படைத்தனர்.

மதுரை விளாங்குடி அருகே உள்ள கரிசல்குளத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ளஒரு கடையில் சி.டி. பிளேயர் வாங்கினார்.

பின்னர் அதை ஒரு பையில் போட்டு சைக்கிளின் முன் பகுதியில் தொங்க விட்டார். பிறகு ஒரு டீக்கடைக்கு சென்றுடீ சாப்பிட்டார்.

அப்போது அந்தப் பகுதி வழியே வந்த ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த பாண்டி என்பவன் திடீரென்று அந்தப்பையைத் தூக்கிக் கொண்டு ஓடத் தொடங்கினான்.

அதைப் பார்த்த சக்திவேல் குரல் எழுப்பவே அந்தப் பகுதியில் நின்று கொண்டிருந்தவர்கள் பாண்டியைத் துரத்தினர்.

படு வேகமாக ஓடிய பாண்டி, கண்மாய் வழியாக வில்லாபுரத்திற்குள் நுழைந்தான். அந்தப் பகுதியில்இருந்தவர்களும் சேர்ந்து பாண்டியை அமுக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

பின்னர் அவனியாபுரம் போலீஸ் நிலையத்தில் பாண்டி ஒப்படைக்கப்பட்டான்.

மேலூர் அருகே நகை பறிப்பு:

இதற்கிடையே மேலூர் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த தம்பதியை தாக்கி தங்கச் சங்கிலி, மோட்டார்சைக்கிளைப் பறித்துக் கொண்டு ஒரு கும்பல் தப்பியது.

மேலூரைச் சேர்ந்த ராஜன்-ஜெனி தாமஸ் தம்பதியர் மதுரைக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது சிட்டம்பட்டி என்ற இடத்தில் வரும்போது, மூன்று பேர் கும்பல் அவர்களை வழிமறித்தது. பின்னர்இருவரையும் மிரட்டி கையில் இருந்த பொருட்களைத் தருமாறு கும்பல் கேட்டது.

அதற்கு ராஜன் மறுக்கவே கம்பியால் அவரைத் தாக்கிய கும்பல், ஜெனி அணிந்திருந்த தங்கச் சங்கிலியைப்பறித்துக் கொண்டது. பின்னர் ராஜன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளையும் பறித்துக் கொண்டு அங்கிருந்துதப்பியது.

இதுகுறித்து ஒத்தக்கடை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X