நாகப்பாவை மீட்க ராமதாசை நாடுகிறது கர்நாடக அரசு
டெல்லி:
வீரப்பனால் கடத்திச் செல்லப்பட்டுள்ள நாகப்பாவை மீட்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சியின் உதவியை நாடகர்நாடக அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
டெல்லி சென்றுள்ள கர்நாடக முதல்வர் கிருஷ்ணா பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மூலம்இந்தக் கோரிக்கையை விடுக்கவுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாசையோ அல்லது அக்கட்சியைச் சேர்ந்த யாராவதுஒருவரையோ வீரப்பனிடம் தூது அனுப்ப கேட்டுக் கொள்ளுமாறு பெர்னான்டசிடம் கிருஷ்ணா கேட்டுக்கொள்வார் என்று தெரிகிறது.
மேலும் நாகப்பாவை மீட்பதற்கு மத்திய அரசு உதவ வேண்டும் என்றும் பெர்னான்டசிடம் கிருஷ்ணா கோரிக்கைவிடுக்கவுள்ளார்.
வீரப்பனிடம் பேச்சு நடத்தி நாகப்பாவை மீட்க பாமகவால் முடியும் என்று தாங்கள் நம்புவதாக கர்நாடக உள்துறைஅமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் பெங்களூரில் நடந்த "அப்பு" பட 100வது நாள் விழாவின் போது, வீரப்பனைசம்ஹாரம் செய்து கொல்ல வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.
ரஜினியின் பேச்சால் ஆத்திரமடைந்த ராமதாஸ், தமிழனாகிய வீரப்பனைக் கொல்ல வேண்டும் என்று சொல்வதாஎன்று கூறி, ரஜினியை மிகவும் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.
இதையடுத்து ரஜினி ரசிகர்களுக்கும் பாமக தொண்டர்களுக்கும் இடையே பெரும் மோதல் வெடித்தது என்பதுநினைவிருக்கலாம். ராமதாசும் வீரப்பனும் வன்னியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-->