For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈரமான கண்கள்

By Staff
Google Oneindia Tamil News

பனாஜி (கோவா):

ஐ.எல்-38 எனப்படும் இந்த விமானங்கள் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டவை..

முதன்முதலாக 1967ல் தான் ஐ.எல்.-38 விண்ணில் பறந்தது. இலூசின் எனப்படும் ரஷ்ய பாதுகாப்பு விமான நிறுவனம் இதைத்தயாரித்து வருகிறது.

ஐ.எல். என்ற பெயரில் பல்வேறு சரக்கு, பயணிகள், போர் விமானங்கள் தயாரிக்கப்பட்டாலும் ஐ.எல்-38 மிக விஷேசமானது.இது எதிர்நாட்டின் கடற்பகுதியை உளவு பார்க்கவும் எதிரிக் கப்பல்களை தாக்கவும் உதவும் விமானமாகும்.

மற்ற ஐ.எல். விமானங்களை பல நாடுளுக்கு ரஷ்யா விற்றிருந்தாலும் ஐ.எல்-38 விமானங்களை இந்தியாவுக்கு மட்டுமே ரஷ்யாதந்தது. இதனால் இந்த ரக விமானங்கள் ரஷ்யாவிடமும் இந்தியாவிடமும் மட்டுமே உள்ளன.

இதன் உளவு கருவிகள், உளவு ரேடார்கள் ஆகியவை பற்றி விவரங்கள் இன்னும் வெளி உலகுக்கு ரஷ்யா மற்றும் இந்தியாவால்வெளியில் சொல்லப்பட்டதில்லை.

IL-38அமெரிக்காவால் ஈராமான கண்கள் சங்கேத பாஷையில் என்று குறிப்பிடப்படும் நவீன ரேடார்களைக் கொண்டது இந்தவிமானம்.

21,000 அடி உயரத்தில் மணிக்கு 722 கி.மீ வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது. 27,000 அடி உயரத்தில் 610 கி.மீ வேகத்திலும்கடலின் மீது 2,000 அடி உயரத்தில் 400 கி.மீ. வேகத்திலும் பறக்கும் திறன் கொண்டது.

இடைவெளியே இல்லாமல் தொடர்ந்து 12 மணி நேரத்துக்கு 7,200 கி.மீ தூரம் பறக்கும் விமானம் இது. இதன் எடை 36,000கிலோ. எரிபொருளுடன் சேர்த்து 63.000 கிலோ எடை கொண்டது.

இரண்டு பைலட்கள், ஒரு பிளைட் என்ஜினியர் தவிர 9 வீரர்கள் இதில் இருப்பது வழக்கம்.

கப்பல்களை அழிக்கும் நீர்மூழ்கி ஏவுகணைகள் கொண்ட இந்த விமானங்களால் நீர்மூழ்கிக் கப்பல்களையும் தாக்க முடியும்.

இந்தியாவுக்கு ரஷ்யா கடந்த 1975ல் 6 ஐ.எல்.- 38 விமானங்களைத் தந்தது. அதன் பின்னர் எத்தனை விமானங்கள் தரப்பட்டனஎன்பது ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது.

இதில் 2 விமானங்களையும் 13 முக்கிய வீரர்களையும் இழந்துள்ளது இந்தியக் கடற்படைக்கு மிகப் பெரிய இழப்பு தான்.

Sᶵz -70; Ea }vࠓ B

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X