For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வீரப்பனைப் பார்க்க யாரும் காட்டுக்குள் போகலாம், ஆனால் ...!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

நாகப்பாவைத் தேடி காட்டுக்குள் செல்பவர்களைத் தமிழக அதிரடிப்படை போலீஸார் தடுத்து நிறுத்திவிசாரிப்பார்கள் என்று தமிழக காவல்துறை கூறியுள்ளது.

கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவை மீட்க வீரப்பனிடம் தூதரை அனுப்ப மாட்டோம் என்று தமிழக அரசுதீர்மானமாக அறிவித்துள்ளது.

ஆனால் அதிகாரப்பூர்வமற்ற பல தூதர்கள் காட்டுக்குள் சென்று வருவதாக தமிழக அரசுக்குத் தகவல்கிடைத்துள்ளதால் ஒரு எச்சரிக்கையை தமிழக காவல்துறை வெளியிட்டுள்ளது. அதில்,

காட்டுக்குள் சென்று வீரப்பனைப் பார்க்க முயல்பவர்கள் அவர்களது சொந்த விருப்பத்தின் பேரிலும், சொந்தமுயற்சியிலும்தான் செல்ல வேண்டும்.

யார் வேண்டுமானாலும் காட்டுக்குள் போகலாம். ஆனால் தமிழக எல்லைப் பகுதியிலிருந்து சத்தியமங்கலம்காட்டுக்குள் நுழையும் யாரையும் அதிரடிப்படை போலீஸார் விசாரிப்பார்கள். அதன் பிறகே உள்ளே செல்லஅனுமதிக்கப்படுவார்கள்.

மேலும் அவர்கள் காட்டுக்குள்ளிருந்து வெளியே வரும் போதும் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்படும்என்று கூறப்பட்டுள்ளது.

கர்நாடகத்தைச் சேர்ந்த ஐந்து பேர் சமீபத்தில் காட்டுக்குள் கிளம்பிப் போனது குறிப்பிடத்தக்கது.

S a] ސР( •u-96;uܟ )

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X