மேலூர் கல்லூரி மாணவர்கள் மீது போலீஸ் தாக்குதல்: கமிஷன் விசாரணை தொடங்கியது
மேலூர்:
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மேலூர் அரசுக் கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதல்தொடர்பாக தமிழக அரசு நியமித்துள்ள கமிஷன் இன்று விசாரணையைத் தொடங்கியது.
பல்கலைக்கழகங்களுடன் அரசுக் கல்லூரிகளை இணைக்க தமிழக அரசு எடுத்த முடிவைக் கண்டித்து தமிழகம்முழுவதிலும் உள்ள 67 அரசுக் கல்லூரிகளைச் சேர்ந்த ஆசிரியர்களும் மாணவர்களும் போராட்டத்தில்ஈடுபட்டனர்.
கடந்த மாதம் மேலூர் அரசுக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது அவர்களைக்கலைப்பதற்காக போலீசார் பயங்கர தடியடி நடத்தினர்.
இதில் பல மாணவர்களின் மண்டை உடைந்தது. ஏராளமான மாணவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில்சிகிச்சை பெற்றனர். சிலர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தச் சம்பவத்தால் மிகவும் கோபமடைந்த மாநிலம் முழுவதிலும் உள்ள அரசுக் கல்லூரி மாணவர்கள் தங்கள்போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர். தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுவலியுறுத்தி மட்டும் ஏராளமான போராட்டங்களை மாணவர்கள் நடத்தினர்.
இதையடுத்து நீதிபதி கே. சுப்பிரமணியம் தலைமையிலான ஒரு விசாரணைக் குழுவை தமிழக அரசு நியமித்து,இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டது.
அதன்படி நீதிபதி சுப்பிரமணியம் தலைமையிலான இந்தக் குழு இன்று தன்னுடைய விசாரணையை மேலூர் அரசுக்கல்லூரியில் துவக்கியது.
போலீசார் தங்களைத் தாக்கியது குறித்து மாணவர்கள் அப்போது விசாரணைக் குழுவினரிடம் வாக்குமூலம்அளித்தனர். தங்களைத் தாக்கியதோடு மட்டுமில்லாமல் தேவையில்லாமல் தங்கள் மீது வழக்குகளையும் போலீசார்பதிவு செய்துள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
விசாரணைக் குழுவினர் அங்கு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே தாக்குதல் நடத்திய போலீசார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரியும், மாணவர்கள்மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெறக் கோரியும் சென்னையில் இன்று அரசுக் கல்லூரிஆசிரியர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
காரைக்குடி அழகப்பா கல்லூரி முதல்வர் சுப்பிரமணிய கவிராயரைக் கெட்ட வார்த்தையால் திட்டிய அதிமுகஎம்.எல்.ஏ. உமாதேவன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உண்ணாவிரதம் இருந்தஆசிரியர்கள் வலியுறுத்தினர்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு முன் இந்த ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம்நடைபெற்றது.
அரசுக் கல்லூரிகளை பல்கலைக் கழகங்களுடன் இணைக்கக் கூடாது என்ற தங்கள் கோரிக்கையைத் தமிழக அரசுஏற்றுக் கொள்ளாவிட்டால் வரும் 8ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தை கட்டாயம் மேற்கொள்வோம்என்றும் அப்போது ஆசிரியர்கள் தெரிவித்தனர்.