மழை வேண்டி தவளைகளுக்குத் திருமணம்: மொய் வசூலித்து விருந்தும் அமர்க்களம்
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வேடம்பட்டி மற்றும் குரும்பப்பாளையம் கிராமங்களில் மழை வேண்டிதவளைகளுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டது.
வேடம்பட்டி மற்றும் குரும்பப்பாளையம் கிராமங்களில் வறட்சி தலை விரித்தாடுகிறது. தண்ணீருக்கும் கடும்பிரச்சினை நிலவுகிறது. இதையடுத்து மழை வேண்டி தவளைகளுக்குத் திருமணம் செய்து வைக்க முடிவுசெய்யப்பட்டது.
ஊர் முழுவதும் தவளை திருமணம் குறித்து தகவல் தரப்பட்டது. ஒரு ஆண் தவளையும், பெண் தவளையும்பிடிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டன.
பட்டுத் துணியால் இரு தவளைகளும் மேக்கப் செய்து முடிக்கப்பட்டதும், ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு மாலைமாற்றி, தாலி கட்டி கல்யாணம் நடந்தது. பிறகு அம்மனுக்கு பூஜைகள் நடந்தன.
அதன் பின்னர் ஊர் மக்களிடம் வசூலான மொய்ப் பணத்தின் மூலம் விருந்தும் நடத்தப்பட்டது. இந்தக்கல்யாணத்தையொட்டி இரு கிராமங்களும் விழாக்கோலம் பூண்டிருந்தன.