For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தண்ணீர் பிரச்சனை: இஸ்ரேலை பின்பற்ற சுவாமி ஐடியா

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் திராவிடர் கழகத்தை தடை செய்ய வேண்டும் என்று ஜனதாகட்சித் தலைவர் டாக்டர் சுப்ரமணியம் சுவாமி கூறினார். இது தொடர்பாக துணைப் பிரதமர் அத்வானியிடம் ஒருகடிதத்தையும் அவர் கொடுத்துள்ளார்.

இது குறித்து சென்னையில் இன்று நிருபர்களிடம் சுவாமி பேசுகையில்,

புலிகளுக்கு ஆதரவான நடவடிக்கைகளில் திராவிடர் கழகத்தினர் ஈடுபட்டுள்ளனர். எனவே இந்த இயக்கத்தைத்தடை செய்ய வேண்டியது அவசியம்.

இது தொடர்பாக கடந்த மாதம் 29ம் தேதி துணைப் பிரதமர் அத்வானியைச் சந்தித்து ஒரு மனுவைக்கொடுத்துள்ளேன்.

காவிரி நீரைக் கேட்டு தமிழகம் தொடர்ந்து பிச்சையெடுத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் ஒவ்வொரு ஆண்டும்அதைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கர்நாடக அரசு குறைத்துக் கொண்டே வருகிறது.

இப்படி கர்நாடகத்திடம் தொங்கிக் கொண்டிருப்பதற்குப் பதிலாக கடல் நீரைப் பாசன நீராக மாற்றும் முயற்சியில்தமிழக அரசு ஈடுபடலாம்.

அவ்வாறு மாற்றவல்ல ஒரு 10 யூனிட்டுகளை கடற்கரையோரங்களில் வைத்தாலே போதும். ஆறு மாதங்களில்தமிழக விவசாயிகளின் பிரச்சனை தீர்ந்துவிடும். இஸ்ரேலில் இந்த முயற்சி பெரும் வெற்றி பெற்றுள்ளது என்றார்சுவாமி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X