காசி-ராமேஸ்வரம் இடையே விரைவில் புதிய ரயில்
மதுரை:
இந்தியாவின் புகழ்பெற்ற புண்ணிய ஸ்தலங்களான ராமேஸ்வரம் மற்றும் காசி ஆகிய நகரங்களுக்கிடையேஅடுத்த ஆண்டு முதல் புதிய ரயில் விடப்படும் என்று ரயில்வேத்துறை இணை அமைச்சர் ஏ.கே. மூர்த்தி கூறினார்.
சென்னையிலிருந்து மதுரை கிளம்பிய கூடல் எக்ஸ்பிரஸ் ரயிலை நேற்று துவக்கி வைத்த மூர்த்தி, அதே ரயிலைஇன்று மதுரையில் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
அடுத்த மூன்று மாதங்களுக்குள் இந்தக் கூடல் எக்ஸ்பிரஸ் ரயில் அனைத்து வசதிகளுடனும் கூடிய ஜனசதாப்திஎக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றப்படும்.
தமிழகத்தில் உள்ள புண்ணிய ஸ்தலமான ராமேஸ்வரத்திற்கும் உத்தரப் பிரதேசத்திலுள்ள காசிக்கும் இடையேஅடுத்த நிதி ஆண்டு முதல் புதிய ரயில் ஒன்று இயக்கப்படும்.
திருச்சி-ராமேஸ்வரம் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாகதிருச்சி-மானாமதுரை பாதை விரைவில் அகல ரயில் பாதையாக மாறவுள்ளது. இதற்காக ரூ.75 கோடிஒதுக்கப்படவுள்ளது.
தமிழகத்தில் ரயில்வே வளர்ச்சித் திட்டங்கள் குறித்து வரும் 13ம் தேதி மதுரையில் அனைத்துக் கட்சி எம்.பிக்களின்கூட்டம் நடைபெறுகிறது. தங்கள் பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய புதிய ரயில் வளர்ச்சித் திட்டங்கள்குறித்து அப்போது எம்.பிக்கள் அறிக்கைகளைத் தாக்கல் செய்யவுள்ளனர்.
அந்த அந்தப் பகுதி எம்.பிக்களும் எம்.எல்.ஏக்களும் இவ்விஷயத்தில் ஒற்றுமையுடன் செயல்பட்டால்தமிழகத்திற்குத் தேவையான அனைத்து ரயில் திட்டங்களும் வெற்றிகரமாக நிறைவேற்றப்படும்.
கூடல் நகரில் ரூ.1.2 கோடி செலவில் ஒரு ரயில்வே நிலையத்தை அமைப்பதற்காகத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக மதுரை எம்.பிக்களான மோகன் (மார்க்சிஸ்ட்) மற்றும் அக்னிராஜ் (திமுக) மற்றும் எம்.எல்.ஏவானவளர்மதி ஜெபராஜ் ஆகியோர் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூ.10 லட்சம் தருவதாக ஒப்புக்கொண்டுள்ளனர். எஞ்சிய ரூ.90 லட்சம் வரும் ரயில்வே பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் என்றார் மூர்த்தி.
முன்னதாக சிவகங்கையில் ஒரு ரயில்வே முன்பதிவு மையத்தை மூர்த்தி தொடங்கி வைத்தார்.