For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்துக்கு தண்ணீர் விட மீண்டும் உத்தரவு: விட முடியாது என கிருஷ்ணா அறிவிப்பு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

தமிழகத்துக்கு தினமும் 0.8 டி.எம்.சி (9,000 கன அடி) நீரை வழங்க வேண்டும் என்று கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் மீண்டும்இன்று உத்தரவிட்டது.

ஆனால், நீரை விட முடியாது என டெல்லியில் நிருபர்களிடம் கர்நாடக முதல்வர் கிருஷ்ணா தெரிவித்தார்.

கடந்த செப்டம்பர் மாதம் காவிரி நதி நீர் ஆணையம் கூறியபடி தமிழகத்துக்கு தினமும் 9,000 கன அடி நீரை கர்நாடகம் திறந்துவிட்டே ஆக வேண்டும் என உச்ச நீதிமன்றம் இன்று இடைக்காலத் தீர்ப்பளித்தது.

இதன் மூலம் தமிழகத்தை ஏமாற்றி வரும் கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் சாட்டையடி கொடுத்துள்ளது.

அதே நேரத்தில் கர்நாடக முதல்வர் கிருஷ்ணா மீது தமிழகம் தொடர்ந்த அவமதிப்பு வழக்குத் தொடர்பான விசாரணையைநீதிபதிகள் வரும் 24ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

கடந்த மாதம் 3ம் தேதி தமிழகத்துக்கு தினமும் 1.25 டி.எம்.சி. நீரை விட என உச்ச நீதிமன்றம் கர்நாடகத்துக்கு உத்தரவிட்டது.இதையடுத்து 4ம் தேதி முதல் கர்நாடகம் நீரை திறந்துவிட ஆரம்பித்தது. ஆனால், அதை விவசாயிகள் தடுத்துவிட்டனர்.

இதையடுத்து 8ம் தேதி பிரதமர் வாஜ்பாய் தலைமையில் கூடிய காவிரி நதி நீர் ஆணையம் தமிழகத்துக்கு தினமும் 0.8 டி.எம்.சி.(9,000 கன அடி) நீரையாவது திறந்துவிடுமாறு உத்தரவிட்டது.

இதையடுத்து மீண்டும் நீரைத் திறக்க ஆரம்பித்த கர்நாடகம் இரு நாட்களில் அதையும் நிறுத்தியது. குடிபோதையில் இருந்த ஒருவிவசாயில் கபினி நீரில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதை காரணம் காட்டி இந்த இழி செயலை கர்நாடகம் செய்தது.

இதைத் தொடர்ந்து கர்நாடத்தின் மீது தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தது. இந்தவழக்கின் விசாரணை இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது. இதற்கிடையே கர்நாடக மற்றும் தமிழக காவிரி அணைப்பகுதிகளையும் விவசாயப் பகுதிகளையும் பார்வையிட்ட காவிரி கண்காணிப்புக் குழு தனது அறிக்கையை நேற்று உச்சநீதிமன்றத்திடம் சமர்பித்தது.

அதில், தமிழகத்தில் நிலைமை மிக மோசமாக இருப்பதைக் குறிப்பிட்டுள்ள குழுவினர் உடனே தமிழகத்துக்கு 63 டி.எம்.சி. நீர்தேவை என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் இன்று கவனத்தில் எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கிர்பால் தலைமையிலான டிவிசன் பெஞ்ச் உடனேதமிழகத்துக்கு தினமும் 9.000 கன அடி நீரை திறந்துவிடுமாறு கர்நாடகத்துக்கு உத்தரவிட்டனர்.

மேலும் இந்த வழக்கு விசாரணையை வரும் 24ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். அதுவரை தினமும் மேட்டூருக்கு 9,000 டி.எம்.சி. நீர்போய்ச் சேர்ந்தாக வேண்டும் என நீதிபதிகள் கூறினர்.

முன்னதாகப் பேசிய கர்நாடக அரசு வழக்கறிஞர் அனில் திவான், தமிழகத்தில் வரும் 24ம் தேதி முதல் வட-கிழக்குப் பருவ மழைஆரம்பித்துவிடும். இதனால் 24ம் தேதி வரை பொறுத்திருந்து பார்த்துவிட்டுத் தான் நீதிமன்றம் தனது உத்தரவை வெளியிடவேண்டும் என்றார்.

இதை தமிழக வழக்கறிஞர் வேணுகோபால் மிகக் கடுமையாக எதிர்த்தார். அதுவரை தமிழக விவசாயிகள் தாங்க மாட்டார்கள்,ஏற்கனவே குறுவைப் பயிரை இழந்துவிட்டு நிற்கும் அவர்கள் சம்பா பயிரிடாவிட்டால் தமிழகத்தில் மிக மோசமான விளைவுஏற்படும்.

உங்கள் (நீதிமன்றம்) உத்தரவை ஏற்று கர்நாடகம் ஒழுங்காக நீரைத் தந்திருந்தால் இந்நேரம் தமிழ்நாட்டுக்கு 16.1 டி.எம்.சி. நீர்கிடைத்திருக்கும். எங்கள் விசாயிகளும் பயிரிடும் வேலையை ஆரம்பித்திருப்பார்கள். அதை கர்நாடகம் செய்யாமல்நீதிமன்றத்தை அவமதித்துவிட்டது என்றார்.

இதையடுத்து நீதிபதிகள் தங்கள் தீர்ப்பை வழங்கினர். அதன் விவரம்:

கடந்த மாதம் 8ம் தேதி காவிரி ஆணையம் உத்தரவிட்டதை ஏற்று தமிழகத்துக்கு தினமும் 9,000 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம்திறந்துவிட வேண்டும். இந்த நீர் மேட்டூரைப் போய் சேருவதை கர்நாடகம் உறுதி செய்ய வேண்டும். இப்போது எங்களது கவலைவிவசாயிகள் குறித்துத் தான். கர்நாடகமோ, தமிழகமோ எந்த மாநில விவசாயியும் பாதிக்கப்படக் கூடாது.

இந்த வழக்கு விசாரணையை 24ம் தேதிக்கு (தமிழகத்தில் வட-கிழக்குப் பருவமழை ஆரம்பிக்க உள்ளதாக கர்நாடக வழக்கறிஞர்சொன்ன தேதி) ஒத்தி வைக்கிறாம். அதுவரை தமிழகத்துக்கு தொடர்ந்து நீர் தர வேண்டும்.

எங்களது இந்த உத்தரவை காவிரி நதி நீர் ஆணையம் வேண்டுமானால் மாற்றி உத்தரவிடலாம். பிரதமர் தலைமையிலான நதி நீர்ஆணையம் சொல்வதை கர்நாடகம் நிச்சயம் அமல்படுத்தியாக வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர்.

கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் சொன்னது மாதிரி 1.25 டி.எம்.சி. தர முடியாது என்று கர்நாடகம் கூறியபோது அதை ஏற்ற பிரதமர்0.8 டி.எம்.சியாவது தர உத்தரவிட்டார். ஆனால், அதையும் கூட கர்நாடகம் ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போதாவது உச்ச நீதிமன்றத் தீர்ப்புககு கர்நாடகம் கட்டுப்படுமா அல்லது வழக்கம் போல விவசாயிகள் மற்றும் பிறரைத்தூண்டிவிட்டு அணைக் கட்டுகளில் கலாட்டாவை ஏற்படுத்தி தமிழகத்துக்கு நீரைத் தராமல் கர்நாடகம் தவிர்க்குமா என்றுதெரியவில்லை.

நீர் விட கர்நாடகம் மறுப்பு:

இந் நிலையில் தமிழகத்துக்கு நீர் விட முடியாது என கர்நாடக முதல்வர் கிருஷ்ணா கூறினார். டெல்லியில் நிருபர்களிடம் பேசியஅவர்,

நாளை பெங்களூரில் அனைத்துக் கட்சிக் கூட்டமும், அமைச்சரவைக் கூட்டமும் நடக்கும். அதில் இது குறித்து விவாதிப்போம்.

உச்ச நீதிமன்றத்திடம் தாக்கல் செய்த பதில் மனுவில் நாங்கள் குறிப்பிட்டுள்ளபடி தமிழகத்துக்கு நீரைத் திறந்துவிடும் நிலையில்நாங்கள் இல்லை. இதில் எந்த மாற்றமும் இருக்காது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X